கடந்த சனியன்று காஷ்மீர் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய இராணுவ கமாண்டர்கள் மற்றும் துணை இராணுவ கமாண்டர்களை பாதுகாப்பை பலப்படுத்த கூறியுள்ளார். அதே போல எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் கூறியுள்ளார். வடக்கு காஷ்மீரின் ஹேன்ட்வாரா,பாரமுல்லா மற்றும் சோபோர் பகுதிகளை சுற்றி வளைத்து அங்கு பாதுகாப்பு வளையத்தை தீவிரப்படுத்த கூறியுள்ளார்.இந்த வளையத்திற்குள் நடைபெற்ற என்கௌன்டர்களில் தான் நாம் கலோனல் உட்பட ஆறு வீரர்களை […]
Read Moreஇராணுவத்தை நவீனப்படுத்த எடுக்கப்பட்டுவரும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்று தான் ஒருங்கிணைந்த தாக்கும் குழு கட்டுமானம்.சோதனை முயற்சிய்க இதை தற்போது இராணுவம் சோதித்து வருகிறது. சிறிய அதே நேரம் மிக கடுமையான தாக்குதல் நடத்தக்கூடிய படையாக சிறு ஒருங்கிணைந்த இராணுவப்படைகள் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேற்கு மற்றும் வடகிழக்கு எல்லைப்பகுதியில் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டன.தற்போது இந்த படைப்பிரிவை களமிறக்க தாமதம் ஆகி வருகிறது.கொரானாவால் அடுத்த கட்ட நடைமுறை சிக்கல்கள் தடைபெற்றுள்ளது. இன்பான்ட்ரி,ஆர்டில்லரி,வான் பாதுகாப்பு ,டேங்குகள் மற்றும் தளவாடங்கள் […]
Read Moreமஹிந்த்ரா நிறுவனம் பாதுகாப்பு படைகளுக்கு பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கி உள்ளது. அதில் ஒன்று தான் மஹிந்த்ரா இலகுரக சிறப்பு கவச வாகனம். இந்த வாகனம் ஸ்டனாக் இரண்டாம் கட்ட பாதுகாப்பை அளிக்கிறது அதாவது 30மீ தொலைவில் இருந்து சுடப்படும் 7.62 தோட்டாக்கள், 6கிலோ வெடிபோருள் தாக்குதல், 80மீ தொலைவில் வெடிக்கும் 155மிமீ உயர்திறன் வெடிபோருள் நிரம்பிய பிரங்கி குண்டு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் பி7 ரக பாதுகாப்பும் அளிக்கிறது அதாவது கனரக துப்பாக்கிகள் மற்றும் […]
Read Moreகாஷ்மீரில் நடைபெற்று முடிந்த ஹேன்ட்வாரா பயங்கரவாத தாக்குதலில் நாம் ஐந்து வீரர்களை இழந்தோம்.இதனால் இந்தியா பாக் மீது கடும் கோபத்தில் தற்போது உள்ளது. இதனால் இந்தியா தாக்ககூடும் என்ற பயத்தில் பாக் தொடர்ந்து வான் ரோந்து பணிகளில் தனது விமானங்களை ஈடுபடுத்தி வருகிறது. ஹேண்ட்வாரா என்கௌன்டர் நடைபெற்றது முதலே பாக் வான் பயிற்சிகளை தொடங்கிவிட்டது என இந்தியாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. தனது எப்-16 மற்றும் ஜேஎப்-17 விமானங்களின் உதவியுடன் தொடர்ந்து வானில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் […]
Read Moreமே 10,1980 உத்திரப் பிரதேசத்தின் அகிர் என்ற கிராமத்தில் பிறந்தார் சுபேதார் மேஜர் யோகிந்திர யாதவ்.அவரது அப்பாவும் ஒரு இராணுவ வீரர் தான்.அவருடைய அப்பா கரன்சிங் யாதவ் குமாஒன் ரெஜிமென்டில் இணைந்து 1965 மற்றும் 1971 போரில் பங்கேற்றவர்.யோகேந்திர சிங் தனது 16வது வயதில் இந்திய இராணுவத்தின் கிரேனாடியர் ரெஜிமென்டில் இணைந்தார். யோகேந்திர சிங் 18வது கிரேனாடியரின் கடக் பிளாட்டூன் கமாண்டோ பிரிவில் இணைந்தார்.கிரெனெடியர் வீரர் யோகேந்திர யாதவ், டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதில் இருந்த மூன்று […]
Read Moreமே 8ஆம் தேதி புறப்பட்ட நமது கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலஷ்வா எனும் போர்க்கப்பல்இன்று காலை மாலத்தீவு நாட்டில் இருந்து சுமார் 698 இந்தியர்களுடன் கொச்சி துறைமுகம் வந்தடைந்தது. மீட்கப்பட்ட இந்தியர்கள் முறையான பரிசோதனைகளுக்கு பின்னர் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படுவர். ஏற்கனவே கடல்சார் பாதுகாப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள கடற்படல தற்போது மீட்பு பணியிலும் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Moreபாகிஸ்தான் சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதிகளை அதிகளவில் தூண்டி விடுகிறது. இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்து அவசர ஆய்வு மேற்கொண்டதோடு பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது உயர்நிலை கூட்டத்தில் சோபோர் , ஹன்ட்வாரா மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அஜித் தோவல் தரைப்படை மற்றும் துணை ராணுவ உயர் அதிகாரிகளிடம் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் […]
Read Moreவடக்கு சிக்கிமில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என மூத்த அதிகாரி இருவர் தகவல் வெளியிட்டுள்ளனர். நாகு லா செக்டாரில் 5000 அடி உயரத்தில் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் இரு தரப்பு வீரர்களும் கடுமையான மோதிக்கொண்டுள்ளனர். இரு பக்கமும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில் நான்கு வீரர்களுக்கும் சீனத் தரப்பில் ஏழு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த சண்டையில் கிட்டத்தட்ட 150 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்பு […]
Read Moreமுதன் முறையாக இந்தியாவை பெயரால் குறிப்பிட்டுள்ள தலிபான் இந்திய நாட்டோடு ஒரு நேர்மறையான உறவைப் பெற விரும்புகிறோம் என்று கூறியதுடன், ஆப்கானிஸ்தானில் புது தில்லியின் ஒத்துழைப்பை வரவேற்று தனது கருத்தை வெளியிட்டுள்ளது. தங்களது நாட்டின் தேவை மற்றும் இருபக்க உறவின் அடிப்படையில் இந்தியாவுடன் சுமூகமான உறவை பேண விரும்புவதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.எதிர்கால ஆப்கனின் கட்டுமானத்திற்கு இந்தியாவின் உதவி தேவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆப்கனில் மட்டுமே எங்களது போராட்டம் இருக்கும் எனவும் எல்லை தாண்டிய விரிவு பற்றி […]
Read Moreமுன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான விகே சிங் அவர்கள் ஆஜ் டாக் தொலைக்காட்சியில் பேசிய போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். முழு காஷ்மீரும் இந்தியாவினுடையது என அவர் கூறியுள்ளார்.பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவினுடையது தான்.விரைவில் அது இந்தியாவுடையதாக மாறும் என கூறியுள்ளார். கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் நடைபெற உள்ள தேர்தல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “பாக் ஆட்சியாளர்களால் அவர்களுடைய சொந்த நாட்டையே ஆளமுடியவில்லை,இராணுவமே முடிவுகள் எடுக்கிறது.மற்றும் அங்குள்ள மக்கள் அங்கிருந்து பிரியவே […]
Read More