பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான இந்தியாவின் எல்லையோர பகுதிகளை பாதுகாக்கும் BSF – Border Security Force எனப்படும் எல்லை பாதுகாப்பு படை தற்போது இரண்டு EADS CASA C-295M போக்குவரத்து விமானங்களை வாங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லை பாதுகாப்பு படை தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் ஆங்காங்கே பல ஆயிரம் மைல்கள் தொலைவுகள் உள்ள இடங்களுக்கு படைகளை நகர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் தற்போது எல்லை பாதுகாப்பு படையிடம் […]
Read Moreஇந்திய கடற்படையின் கனவு திட்டங்களில் ஒன்றான P-75I (Project 75 India) எனப்படும் இந்தியாவிலேயே தொழில்நுட்ப பகிர்தல் மூலமாக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டத்திற்கான நீர்மூழ்கி கப்பலை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி வல்லுனர் குழு ஒன்று ஜெர்மனி இந்த திட்டத்திற்கு அளிக்க முன்வந்துள்ள U-212/214 ரக அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை பார்வையிட ஜெர்மனி சென்றுள்ளது அங்கு இந்த நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கு […]
Read Moreஇந்திய கடற்படைக்கு அமெரிக்காவில் இருந்து உலகின் அதிநவீன கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி வேட்டை ஹெலிகாப்டரான MH-60 ROMEO ஹெலிகாப்டர்களில் 24கினை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் அவற்றில் முதல் ஆறு ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்காவில் விமானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட இதர குழுவினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு இந்திய கடற்படையின் சேவையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. இவை INAS Indian Naval Air Squadron 344 அதாவது […]
Read Moreஇந்திய படைகளை மாலத்தீவு நாட்டில் இருந்து அந்நாட்டு அரசு வெளியேற உத்தரவிட்டு இந்திய படைகள் வெளியேறியன, இதற்கு பின்னில் சீனாவின் கை உள்ளது என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் செக் வைக்கும் விதமாக இந்தியா தனது மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள லட்சத்தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ள மினிக்காய் தீவில் INS JATAYU ஜடாயு என்ற பெயரில் கடற்படை தளம் ஒன்றை கடந்த 6ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தது. இந்த தீவு உலக கடல்சார் வர்த்தக […]
Read Moreஅஸர்பெய்ஜான் நாட்டுடன் கடந்த சில வருடங்களாக தீவிரமான எல்லை பிரச்சினை மற்றும் போரில் அர்மீனியா ஈடுபட்டுள்ளது அதை தொடர்ந்து இந்தியாவுடன் பல ஒப்பந்தங்கள் மூலமாக ஆயுதங்களை வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு முதல்கட்டமாக ஆறு ATAGS பிரங்கிகளை அர்மீனியா வாங்கிய நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மீண்டும் சுமார் 84 ATAGS பிரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் மூன்று ஆண்டுகளில் டெலிவரி […]
Read Moreமிக முக்கியமான திருப்புமுனையாக நேற்று பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA ஆம்காவை வடிவமைத்து தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தலைமை தாங்கி வரும் இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாய் ஆகும், இந்த திட்டத்திலை பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்திய விமானப்படை 2030ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய போர் விமானங்களை படையில் […]
Read Moreசெங்கடல் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜெர்மனி சார்பில் சாக்சென் வகையை சேர்ந்த F221 என்னும் அடையான எண் கொண்ட FGS HESSEN என்கிற போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வாரம் ஒரு நாள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் கப்பலின் ரேடார்கள் ஒரு டிரோன் பறந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தன இந்த டிரோன் யாருடையது என்பதை குறிக்கும் எந்த அடையாளங்களும் இல்லை ஆனால் இது அமெரிக்க […]
Read Moreஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஷ்கோல்ஸ் திங்கட்கிழமை அன்று “ஜெர்மனி தனது டாரஸ் தொலைதூர க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிக்காது எனவும் அப்படி செய்தால் அவற்றை ஏவ ஜெர்மன் படையினர் உக்ரைனுக்கு சென்று உக்ரைன் படைகளுக்கு களத்தில் உதவ வேண்டிய சூழல் வரும் என கூறியுள்ளார். அதாவது உக்ரைனுக்கு பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்சு கூட்டு தயாரிப்பான STORM SHADOW ஏவுகணைகளை பிரிட்டனும் ஃபிரான்சும் வழங்கி உள்ளன ஆனால் இவற்றை பயன்படுத்தி உக்ரைன் படைகளுக்கு பழக்கமில்லாத காரணத்தால் ஃபிரெஞ்சு படைகள் […]
Read Moreமாலத்தீவில் இருந்து இந்திய மிலிட்டரி வீரர்கள் வெளியேற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்ட பிறகு தற்போது இந்திய சிவிலியன் குழு மாலத்தீவு செல்கிறது.இந்த குழு அங்கு இந்திய வீரர்கள் செய்த பணியை செய்யும்.அங்கு மூன்று ஏவியேசன் குழுக்களாக நமது வீரர்கள் பணியாற்றி வந்தனர்.இந்த குழு அந்த மூன்றில் ஒன்றில் பணிசெய்ய அனுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டகளாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வந்த இராணுவ உறவு தற்போது முடிந்துள்ளது.இந்த பணிகளை இனி சிவிலியன்கள் மேற்கொள்வர். இந்தியா மாலத்தீவு உறவு தற்போது […]
Read Moreஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் ஃபிரான்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகள் சார்ந்த பாதுகாப்பு கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஐரோப்பிய பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் அதனை உறுதி செய்வது ஐரோப்பிய நாடுகளின் கடமை எனவும் கூறினார். மேலும் உக்ரைனில் நடப்பது சரியல்ல, நேட்டோ நாடுகளின் படைகள் தேவைப்படும் பட்சத்தில் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரஷ்ய படைகளுடன் மோதும் என்றார். இது உலக அரங்கில் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் நேட்டோ வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஷ்ய […]
Read More