தெற்கு கார்கில் பகுதியில் புதிய டவுன் ஒன்றை கட்டமைக்க கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அம்மாநில அரசு இந்திய தரைப்படையுடன் பேசி வந்தது. இதன் பலனாக அடுத்த ஆறு மாதங்களில் தரைப்படை தனது கட்டுபாட்டில் உள்ள 375 ஏக்கர் நிலத்தை சிவில் நிர்வாகத்திற்கு பரிமாற்றம் செய்யும், இதற்கு ஈடாக ராணுவத்திற்கு வேறு நிலம் வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் லடாக் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் கார்கில் துணை ஆணையருமான திரு. பஸீர் உல் ஹக் […]
Read Moreஇந்தியா தனது கடற்படைக்காக ரஷ்யாவிடம் இருந்து 2 அட்மிரல் க்ரிகோரோவிச் ரக கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அதிநவீன ஸ்டெல்த் கப்பல்கள் ஃப்ரிகேட் ரகத்தை சேர்ந்தவை இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2.5 பில்லியின் டாலர்கள் ஆகும். ரஷ்யாவின் கலினின்க்ராட் நகரத்தில் உள்ள யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் இந்த கப்பல்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இவற்றிற்கான என்ஜின்களை உக்ரைனில் இருந்து இந்தியா வாங்கியது, ஆனால் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் […]
Read Moreஇவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை நமக்கு.முன்னாள் உளவுத் துறை அதிகாரி,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி,முன்னாள் சட்டம் ஒழுங்குத் துறை அதிகாரி மற்றும் இந்தியாவின் ஐந்தாவது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.மேலும் இன்டலிஜன்ஸ் பீரோவின் முன்னாள் இயக்குனராக பணியாற்றியவர்.மேலும் அதன் நேரடி நடவடிக்கை பிரிவின் தலைமையாக பத்தாண்டுகள் பணியாற்றியவர். 2014 முதல் இந்தியாவின் (பிரதமரின் ) பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவருகிறார்.உத்ரகண்ட்டில் 1945 ல் பிறந்தவர்.இதுவரை காவல்துறை விருது , குடியரசு தலைவரின் காவல்துறை விருது மற்றும் கீர்த்தி சக்ரா விருது பெற்றவர்.இவரின் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் செனாப் நதி அருகே இளம்பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் தவறி விழுந்த அவர் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக பொதுமக்கள் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில சம்பவ இடத்துக்கு வந்த ராணுவ வீரர்கள் கனிராஜ் மற்றும் சுனில் ஆகியோர் ஆற்றில் குதித்தனர். இருவரும் உயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை காப்பாற்றினர், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வீரர்களுக்கு நன்றி […]
Read Moreவருகிற 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இந்தியா ஃபிரான்ஸ் இடையே போர் பயிற்சி நடைபெற உள்ளது. டெஸர்ட்நைட்21 என பெயர் இடப்பட்டுள்ள இப்பயிற்சியில் கலந்து கொள்ள இருநாட்டு விமானப்படைகளும் தயாராகி வருகின்றனர். நேற்று இரவு ஏ400எம் விமானத்தில் ஃபிரெஞ்சு விமானப்படை வீரர்கள் ஜோத்பூர் வந்து சேர்ந்தனர்.
Read Moreஇந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்தது இந்திய அமெரிக்கா இடையே சில உரசல்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் எஸ்400 அமைப்பை இயக்குவதற்கான பயிற்சி பெற அடுத்த சில நாட்களில் ரஷ்யா புறப்பட உள்ளனர். ஏறத்தாழ 100 வீரர்கள் இந்த பயிற்சிகளுக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள கோவ்ர் செக்டாரில் உள்ள ஜோக்மா கிராமம் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்போது காவல் பணியில் இருந்த தரைப்படை வீரர்கள் உடனடியாக பயங்கரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் 4 தரைப்படை வீரர்கள் காயம் அடைந்தனர் அதில் ஒரு வீரர் மோசமான நிலையில் உள்ளார் […]
Read Moreஇலகுரக தேஜாஸ் மார்க்1 ரக விமானம் தற்போது தயாரிப்பு நிலையை எட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அதன் அடுத்த வடிவமான தேஜாஸ் மார்க்2 நடுத்தர போர்விமானத்திற்கான பணிகள் ஆரம்பித்து உள்ளன. முதல் விமானம் 2022 ஆகஸ்ட் மாதம் பணிமனையில் இருந்து வெளிவரும், பின்னர் ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு முதல் பறக்கும் சோதனை நடைபெறும, 2026-2026 ஆண்டு வாக்கில் படையில் இணைக்கப்படும்.
Read Moreதேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் தற்போது அமெரிக்காவின் F404-GF-IN20 என்ஜின்கள் பயன்படுத்தி வரப்படுகிறது. சில வருடங்களாகவே இந்த என்ஜின்களை தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் உரிமம் வாங்கி தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் இந்திய விமானப்படை அதனை விரும்பவில்லை. ஆகவே ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே புதிய என்ஜினை தயாரிக்க முடிவு […]
Read Moreஃபிரான்ஸ் சமீபத்தில் இந்தியாவுக்கு அதிரடி ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. சுமார் 5 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் அதாவது ஏறத்தாழ 45,000 கோடி ருபாய் மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்கள் , 100 பேந்தர் ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 ஏர்பஸ் ஏ330 பல்திறன் டேங்கர் போக்குவரத்து விமாறங்களை வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுவரையிலும் இந்தியா இதுகுறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More