இரு நாட்டு படைகளும் எல்லையில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்திய விமானப்படையின் அதிஎடை தூக்கும் விமானங்கள் உதவியுடன் டேங்க் மற்றும் கவச வாகனங்கள் எல்லை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. விமானப் படையும் தனது காம்பட் ரோந்து பணியை அதிகரித்துள்ளது.அமெரிக்கத் தயாரிப்பு சி-17 மற்றும் இரஷ்ய தயாரிப்பு ஐஎல்-76 விமானங்கள் உதவியுடன் ஹிமாலய பகுதிக்கு டேங்குகள் சண்டிகர் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து கவச வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியா ஏற்கனவே மூன்று ஆர்மர் ரெஜிமென்டுகளை லடாக்கில் […]
Read Moreபிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலின் பிஆர்பி ராமோன் அல்கராஸ் கடந்த மே 7 அன்று கொச்சின் கடற்கரை பகுதியில் என்ஜின் தீ காரணமாக சேதத்திற்குள்ளானது.பிறகு இந்த போர்க்கப்பலை சீரமைக்க இந்தியா உதவியது.இதன் பிறகு செய்தி வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கடற்படை இந்தியாவுடன் ஆழ்ந்த கடற்சார் உறவை பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது. “துரதிஷ்டவசமான இந்த சம்பவத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான உதவியை இந்தியா வழங்கியுள்ளது.இந்தியா-பிலிப்ஸ் உறவிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது” என வைஸ் அட்மிரல் ஜியோவன்னி கார்லோ தெரிவித்துள்ளார். […]
Read Moreலடாக்கில் கண்காணிப்பை அதிகரிக்கும் இந்தியா இந்திய இஸ்ரேலிடமிருந்து வாங்கிய ஹெரோன் ஆளில்லா விமானங்களை வைத்து லடாக் எல்லையோரம் கண்காணிப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்தோ திபெத் எல்லை காவல்படை மற்றும் மலையக போர்ப்பயிற்சி பெற்ற படையினர் எல்லைக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். மலையக போர் முறையானது மிகவும் கடினமான போர்முறைகளில் ஒன்றாகும், காரணம் உயரத்தில் இருக்கும் 1 எதிரியை வீழ்த்த சுமார் 10வீரர்களை இழக்க வேண்டியது இருக்கும், இது கார்கில் போரின் போதும் நடைபெற்றது. உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், […]
Read Moreதரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே அவர்கள் இன்று லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே அதிகரித்து வரும் இந்திய சீன எல்லை பதட்டங்களின் போது இந்த லடாக் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் அங்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் தரைப்படையின் தயார்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் கல்வான் பகுதியில் சீனர்களுக்கு எதிராக போரிட்டு காயமடைந்த வீரர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் நமது தளபதி அவர்கள். […]
Read More35 கம்பெனி இந்தோ திபத் எல்லைப் படையினர் இந்திய-சீன எல்லையில் உள்ள முன்னனி நிலைகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் உள்ள ஐடிபிபி வீரர்கள் விரைவில் முன்னனி எல்லைக்கு நகர்த்தப்பட உள்ளனர். 3488கிமீ நீளமுள்ள இந்திய-திபத் எல்லையை காவல் காக்கும் பணி இந்தோ திபத் எல்லைப் படையினர் செய்து வருகின்றனர்.எல்லை முழுதும் 180 நிலைகளை பாதுகாப்பு படையினர் காவல் காத்து வருகின்றனர்.
Read Moreகடந்த வியாழக்கிழமை சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஜப்பானுடைய அனாமி ஒஷிமா தீவுகளுக்கு அருகே ஊடுருவியதை ஜப்பானிய கடற்படை உறுதி செய்து கொண்டது. ஜப்பானிய கடற்படையின் ஜே.எஸ். காகா எனும் ஹெலி கேரியர் மற்றும் ஒரு பி1 கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானம் ஆகியவை சீன நீர்மூழ்கியின் இருப்பை உறுதி செய்து கொண்டன. சுமார் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து காகா கப்பலும் ஜப்பானிய விமானங்களும் அந்த நீர்மூழ்கி கப்பலை பின்தொடர்ந்துள்ளன. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு […]
Read Moreபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் பணியாற்றும் ஐந்து ஊழியர்கள் வாகா எல்லை வழியாக நாடு திரும்பியுள்ளனர். அவர்களின் பெயர்களாவன;1) குருப் கேப்டன் மனுமிதா2) இரண்டாம் செயலர் ஷிவகுமார்.3) பங்கஜ்4) செல்வதாஸ் பால் (CISF DRIVER)5) த்விமு ப்ரம்மா (CISF DRIVER)ஆகியோர் ஆவர். இவர்களில் செல்வதாஸ் பால் மற்றும் த்விமு ப்ரம்மா ஆகியோரை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையினர் கடத்தி சித்திரவதை செய்துள்ளனர். ஜூன் 15 அன்று டிரைவர்களாக பணியாற்றும் இவர்களை இந்திய தூதரகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் […]
Read Moreகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். 182வது பட்டாலியனைச் சேர்ந்த தலைமைக் காவலர் காலே சுனில் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.அவர் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவர். புல்வாமாவின் பன்ஷு ஏரியாவில் இந்த என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளிடம் இருந்து இரு ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Read Moreசீனாவின் கிழக்கு கட்டளையக தளபதியான ஜெனரல். ஜாவோ ஜாங்கி மற்றும் வேறு சில மூத்த சீன ராணுவ அதிகாரிகள் கல்வான் தாக்குதலை நடத்த உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்தகவல் கூறுகிறது. சீனா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு முன்னால் பலவீனமாக தெரியக்கூடாது என்பதற்காக முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற யோசனையின் அடிப்படையில் பல பகுதிகளில் வம்பிழுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் கல்வான் பள்ளதாக்கிலும் நமது வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் […]
Read Moreதரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே அதிகரித்து வரும் இந்திய சீன எல்லை பதட்டங்களின் போது இன்று லடாக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் அங்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் தரைப்படையின் தயார்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த தீடீர் விசிட் கடுமையான பதட்டத்தால் பல ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பாங்காங் ஸோ பகுதி கல்வான் பகுதிக்கு அடுத்து மோதல் நடைபெற வாய்ப்புள்ள […]
Read More