மாலத்தீவில் இருந்து வெளியேறும் இந்திய பாதுகாப்பு படைகள் – மார்ச் 10க்குள் முழுமையாக வெளியேற முடிவு

February 29, 2024

மாலத்தீவில் இருந்து இந்திய மிலிட்டரி வீரர்கள் வெளியேற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்ட பிறகு தற்போது இந்திய சிவிலியன் குழு மாலத்தீவு செல்கிறது.இந்த குழு அங்கு இந்திய வீரர்கள் செய்த பணியை செய்யும்.அங்கு மூன்று ஏவியேசன் குழுக்களாக நமது வீரர்கள் பணியாற்றி வந்தனர்.இந்த குழு அந்த மூன்றில் ஒன்றில் பணிசெய்ய அனுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டகளாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வந்த இராணுவ உறவு தற்போது முடிந்துள்ளது.இந்த பணிகளை இனி சிவிலியன்கள் மேற்கொள்வர். இந்தியா மாலத்தீவு உறவு தற்போது […]

Read More

உக்ரைனுக்கு படைகள் அனுப்புவோம் உளறிய ஃபிரெஞ்சு அதிபர் மிரட்டிய ரஷ்ய அதிபர் மறுத்த நேட்டோ நாடுகள் !!

February 28, 2024

ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் ஃபிரான்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகள் சார்ந்த பாதுகாப்பு கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஐரோப்பிய பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் அதனை உறுதி செய்வது ஐரோப்பிய நாடுகளின் கடமை எனவும் கூறினார். மேலும் உக்ரைனில் நடப்பது சரியல்ல, நேட்டோ நாடுகளின் படைகள் தேவைப்படும் பட்சத்தில் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரஷ்ய படைகளுடன் மோதும் என்றார். இது உலக அரங்கில் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் நேட்டோ வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஷ்ய […]

Read More

விண்வெளிக்கு செல்ல தயாராகும் வீரர்களின் விவரங்கள் !!

February 28, 2024

இந்திய விமானப்படையில் இருந்து 4 அதிகாரிகள் இந்தியாவின் லட்சிய திட்டமான மனிதர்களை அதாவது இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர், அவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். மிஷன் கமாண்டர் அதாவது இந்த ககன்யான் திட்டத்தின் கட்டளை அதிகாரியாக க்ரூப் கேப்டன் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வாகி உள்ளார், இவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா பஞ்சாயத்திற்குட்பட்ட திருவழியாடு கிராமத்தை சேர்ந்தவர். 47 வயதாகும் இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து பின்னர் விமானப்படை […]

Read More

விண்வெளி செல்லும் குழுவில் தேர்வாகியுள்ள சென்னை அதிகாரி !!

February 28, 2024

க்ரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் சென்னையில் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல்19 ஆம் தேதி பிறந்தார், பள்ளி கல்வியை முடித்த அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு சேர்ந்து பயிற்சி பெற்று குடியரசு தலைவரின் தங்க பதக்கம் Presidents Gold Medal பெற்று பின்னர் விமானப்படை அகாடமியில் Sword of Honor வீரவாள் பெற்று பயிற்சி நிறைவு செய்து இந்திய விமானப்படையில் அதிகாரியாக 21 ஜூன் 2003ஆம் ஆண்டு இணைந்தார். அன்று முதல் […]

Read More

இந்தியாவிற்கு தனது நீர்மூழ்கியை விற்கத் திட்டமிடும் ஸ்பெயின்- முக்கிய தகவல்கள்

February 28, 2024

இந்தியா தனது கடற்படைக்கு ஆறு நீர் மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளிடமிருந்து டெண்டர்கள் கோரியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஸ்பெயின் தனது நீர்மூழ்கியை விற்க ஸ்பெயின் முயற்சித்து வருகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி இந்திய வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. P-75I திட்டத்தின் கீழ் இந்தியா ஆறு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.இதற்காக ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் , இரஷ்யா ஆகிய நாடுகள் […]

Read More

19 மாதங்களில் தயாரான ராணுவத்திற்கான இலகு ரக டேங்க்

February 27, 2024

லாசன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ராணுவத்திற்கான இலகுரக டேங்க்கை 19 மாதங்களில் தயார் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது அதை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ உடன் இணைந்து இந்து திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதாக L&T நிறுவனம் கூறியுள்ளது. 19 மாதங்களில் இந்த டேங்க் தயாராகி உள்ளது வரும் கோடை காலத்தில் இந்த டேங்க்கை சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.தொடர்ச்சியான சோதனைகள் மூலம் டேங்கின் […]

Read More

மிக் – 29 யுபிஜி விமானங்களுக்கு புதிய என்ஜின் – புது வாழ்வு பெறும் விமானங்கள்

February 24, 2024

இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு திறனை பலப்படுத்தும் பொருட்டு இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களுக்கு புதிய என்ஜின்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த விமானங்களின் வாழ்நாளை அதிகரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இரஷ்யா மற்றும் இந்தியாவின் ஹால் நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.சுமார் 5300 கோடிகள் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மேலும் விமானத்தின் வாழ்நாளை 40 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. விமானத்தில் எந்த ரக என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது என்ற […]

Read More

அதிரடி..! 19000 கோடிகளுக்கு கடற்படைக்கு பிரம்மோஸ் வாங்க அனுமதி

February 23, 2024

சுமார் 19,000 கோடி செலவில் 200 தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்காக வாங்க கேபினட் கமிட்டி அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இடையே கையெழுத்தாக உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் கூட்டு தயாரிப்புதான் இந்த பிரமோஸ் ஆகும்.தற்போது தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகளை மேலதிக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா […]

Read More

ருத்ரம் – 3 ஏவுகணை சோதனைக்கு தயாராகும் சுகாய் – வலுக்கும் பலம்

February 21, 2024

ருத்ரம் வான்-வான் ஏவுகணை வரிசைகளின் அடுத்த கட்ட மேம்பாட்டு சோதனைக்கு சுகாய் விமானம் தயாராகி வருகிறது.இதற்காக ஒரு சுகாய் விமானம் பிரத்யேகமாக தயாராகி வருகிறது.இந்த விமானத்தில் இருந்து ருத்ரம் மார்க் 3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டு வருகிறது. ருத்ரம் 1.6 டன்கள் எடையும்= 300-400கிமீ அளவிலான வெடிபொருளையும் சுமந்து செல்லும் திறன் பெற்றது.11 கிமீ உயரத்தில் இருந்து ஏவப்பட்டால் மாக் 0.9 வேகத்தில் சுமார் 600கிமீ வரை சென்று தாக்குதல் நடத்தக் கூடியது.இது விமானப்படையின் தாக்குதல் தூரத்தை […]

Read More

1200 ஆர்டில்லரி துப்பாக்கிகளை வாங்கி குவிக்க உள்ள இந்தியா – முழு தகவல்கள்

February 18, 2024

இந்தியா தற்போது புதிதாக 1200 இழுவை ரக towed Howitzers துப்பாக்கிகள் வாங்க உள்ளது. முன்னதாக 400 துப்பாக்கியில் மட்டுமே வாங்க முடிவெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிக 800 துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன. இந்த 1200 துப்பாக்கிகளும் இந்திய ஆர்டில்லரி ரெஜிமென்டின் முதுகெலும்பாக விளங்க உள்ளது. இந்த துப்பாக்கிகள் 15 டன்களுக்கும் குறைவான எடையை பெற்று இருப்பதால் பல்வேறு இடங்களில் பல்வேறு காலநிலைகள் இவற்றை எளிதாக கையாள முடியும். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் செயல்படுத்திறன் அதிகரிக்கும்.இந்திய […]

Read More