அண்மை செய்திகள்

மேலும் 40 C-295M போக்குவரத்து விமானங்கள் வாங்க உள்ள இந்தியா ?

October 6, 2023

இந்திய விமானப்படை தனது போக்குவரத்து பிரிவை தற்போது வலுப்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 சி-295 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது. மேலும் இந்த விமானங்களை இந்தியாவின் டாட்டா நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளன.மொத்தமாக 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். தற்போது பாதுகாப்புத் துறையில் இருந்து வெளிவரும் செய்திகள் மூலமாக இந்தியா மேலும் 40 […]

Read More

ஏழு பில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட உள்ள சுகாய் விமானங்கள்

October 5, 2023

இந்திய விமானப்படையில் உள்ள சுகாய் விமானங்களை 7 பில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக விமானப்படை கூறி உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுகாய் விமானங்களுக்கு புதிய அதி நவீன தொழில்நுட்பங்கள் ரேடார்கள் மற்றும் ஏவியானிக்ஸ் பொருத்தப்படும். தற்பொழுது இந்திய விமானப்படையில் 272 சுகாய் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் விமானப் படையின் முதுகெலும்பாக உள்ளன. தற்போது இந்த விமானங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வந்தாலும் நவீன போர் முறைக்கு ஏற்றவாறு இந்த விமானங்களை மேம்படுத்துவது அவசியமாகும். தற்போது […]

Read More

இந்திய ராணுவத்திற்காக 1200 இழுவை ஆர்டில்லரி துப்பாக்கி அமைப்புகள் வாங்க திட்டம்

October 1, 2023

இந்திய ராணுவத்தின் ஆர்டில்லரி படைப்பிரிவை வலுப்படுத்தும் பொருட்டு 1200 அடுத்த தலைமுறை இலுவை துப்பாக்கி அமைப்புகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய ஆர்ட்டில்லரி வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 400 துப்பாக்கிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இழுவை துப்பாக்கி அமைப்பு 15 டன்கள் எடை உடையதாக இருக்கும். மேலும் பல மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும். Laser based ignition, Software […]

Read More

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்- போட்டு தள்ளிய ராணுவம்

September 30, 2023

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் போட்டு தள்ளியுள்ளனர். கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில் ராணுவம் மற்றும் குப்வாரா காவல் துறையினர் இணைந்து இந்த ஆப்பரேஷனை நடத்தியுள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மச்சில் செக்டாரில் இந்த என்கவுண்டர் நடைபெற்றுள்ளது. என்கவுண்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்டரில் இருந்து இரு ஏகே ரக துப்பாக்கிகள்,ஒரு கை துப்பாக்கி […]

Read More

156 இந்தியத் தயாரிப்பு தாக்கும் வானூர்திகளை வாங்க உள்ள விமானப்படை

September 30, 2023

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமானப்படைக்காக உள்நாட்டுத் தயாரிப்பு 156 பிரசந்த் இலகுரக தாக்கும் வானூர்திகள் வாங்கப்பட உள்ளன.இந்த வானூர்திகள் பாக் மற்றும் சீன எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. தற்போது விமானப்படை மற்றும் இராணுவம் தங்களது படைகளில் 15 வானூர்திகளை இணைத்துள்ளது.கடுமையான கால நிலைகளிலும், பனிப்பிரதேசத்திலும் செயல்படும் வண்ணம் இந்த வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விமானப்படை தனக்கு 156 வானூர்தி தேவை என அரசை அணுகியுள்ளது.இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தவிர […]

Read More

இந்தியாவின் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் மீது ஆர்வம் காட்டும் பிரேசில்- முக்கியத் தகவல்கள்

September 30, 2023

இந்தோ-பசிபிக் நாடுகளின் இராணுவத் தளபதிகள் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.இதில் பிரேசில் நாட்டு இராணுவத் தளபதி ஜோஸ் இ சில்வா அவர்களும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியா தனது உள்நாட்டு தயாரிப்புகளை காட்சிபடுத்தியிருந்தது. அப்போது தான் இந்திய தொழில்நுட்பங்கள் மீது தனது ஆர்வத்தை பிரேசில் நாட்டு இராணுவ தளபதி வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக இந்தியாவின் TATA advanced systems limited தயாரித்த ALS-50 loitering munitions மீது தனது ஆர்வத்தை வெளியிட்டார்.இதே போல newspace research […]

Read More

DRDO தயாரித்துள்ள நீண்ட தூர நிலம் தாக்கும் ஏவுகணை – முக்கிய சோதனை கட்டத்திற்கு தயார்

September 30, 2023

இந்தியாவின் DRDO நிறுவனம் மேம்படுத்தியுள்ள நீண்ட தூரம் சென்று நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்க உள்ள க்ரூஸ் ஏவுகணை மிக விரைவில் முக்கிய சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.சப் சோனிக் க்ருஸ் ஏவுகணையான இது சுமாராக 1000கிமீ வரை சென்று இலக்கை தாக்க கூடியது ஆகும். நிர்பாயா ஏவுகணை திட்டத்தின் அடுத்த திட்டமாக இந்த நெடுந்தூர தாக்கும் ஏவுகணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விமானப்படை மற்றும் கடற்படைக்காக இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏவுகணையின் தாக்கும் தூரம் மற்றும் திறன் […]

Read More

ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ள பிரேசில்

September 29, 2023

பிரேசில் நாட்டு ராணுவ தளபதி அவர்கள் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஒரு கண்டிஷனையும் அவர் முன் வைத்துள்ளார். இந்தியா இதற்கு மாற்றாக பிரேசில் தயாரிப்பு எம்பரேயர் விமானம் வாங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய விமானப்படைக்கு தற்போது 40 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் தேவையாக உள்ளன.இதற்காக பிரேசில் தனது C-390M medium Haul விமானத்தை வழங்க முன்வந்துள்ளது.இது தவிர இந்தியாவிற்கு ஆறு அவாக்ஸ் விமானங்கள் […]

Read More

செவ்வாயை அடுத்த இலக்காக வைத்துள்ள இஸ்ரோ – ரோவரை களம் இறக்க திட்டம்

September 29, 2023

நிலவில் வெற்றிகரமாக ரோவரை இறக்கி சாதனை புரிந்த பின் தற்போது செவ்வாய் கிரகத்திலும் ரோவரை இறக்கி செவ்வாய்க் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சோமநாத் அவர்கள் கூறியுள்ளார். செவ்வாயில் ரோவரை களம் இறக்கும் திட்டம் தற்போது முதற்கட்டத்தில் உள்ளதாகவும் இஸ்ரோ இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ ஏற்கனவே செவ்வாயை ஆய்வு செய்ய மங்கள்யான் எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது. இது இஸ்ரோவின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது. செவ்வாய் […]

Read More

புதிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பெறும் இந்திய கடற்படையின் நீர் மூழ்கி வேட்டையாடி P8I விமானம்

September 29, 2023

இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் P8I விமானம் இந்திய கடற்படைக்கு ஒரு ஆகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. இந்திய பெருங்கடல் பகுதி மட்டுமல்லாமல் சீனாவுடனான மோதலின் போதும் லடாக் மற்றும் கிழக்கு இமாலய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு இந்த விமானம் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழகத்தில் அரக்கோணத்தில் உள்ள ஐ என் எஸ் ராஜாளி தளத்திலிருந்து எட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்களின் தாக்கம் திறனை அதிகரிக்கும் பொருட்டு சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் […]

Read More