காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் போட்டு தள்ளியுள்ளனர். கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில் ராணுவம் மற்றும் குப்வாரா காவல் துறையினர் இணைந்து இந்த ஆப்பரேஷனை நடத்தியுள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மச்சில் செக்டாரில் இந்த என்கவுண்டர் நடைபெற்றுள்ளது. என்கவுண்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்டரில் இருந்து இரு ஏகே ரக துப்பாக்கிகள்,ஒரு கை துப்பாக்கி […]
Read Moreமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமானப்படைக்காக உள்நாட்டுத் தயாரிப்பு 156 பிரசந்த் இலகுரக தாக்கும் வானூர்திகள் வாங்கப்பட உள்ளன.இந்த வானூர்திகள் பாக் மற்றும் சீன எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. தற்போது விமானப்படை மற்றும் இராணுவம் தங்களது படைகளில் 15 வானூர்திகளை இணைத்துள்ளது.கடுமையான கால நிலைகளிலும், பனிப்பிரதேசத்திலும் செயல்படும் வண்ணம் இந்த வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விமானப்படை தனக்கு 156 வானூர்தி தேவை என அரசை அணுகியுள்ளது.இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தவிர […]
Read Moreஇந்தோ-பசிபிக் நாடுகளின் இராணுவத் தளபதிகள் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.இதில் பிரேசில் நாட்டு இராணுவத் தளபதி ஜோஸ் இ சில்வா அவர்களும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியா தனது உள்நாட்டு தயாரிப்புகளை காட்சிபடுத்தியிருந்தது. அப்போது தான் இந்திய தொழில்நுட்பங்கள் மீது தனது ஆர்வத்தை பிரேசில் நாட்டு இராணுவ தளபதி வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக இந்தியாவின் TATA advanced systems limited தயாரித்த ALS-50 loitering munitions மீது தனது ஆர்வத்தை வெளியிட்டார்.இதே போல newspace research […]
Read Moreஇந்தியாவின் DRDO நிறுவனம் மேம்படுத்தியுள்ள நீண்ட தூரம் சென்று நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்க உள்ள க்ரூஸ் ஏவுகணை மிக விரைவில் முக்கிய சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.சப் சோனிக் க்ருஸ் ஏவுகணையான இது சுமாராக 1000கிமீ வரை சென்று இலக்கை தாக்க கூடியது ஆகும். நிர்பாயா ஏவுகணை திட்டத்தின் அடுத்த திட்டமாக இந்த நெடுந்தூர தாக்கும் ஏவுகணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விமானப்படை மற்றும் கடற்படைக்காக இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏவுகணையின் தாக்கும் தூரம் மற்றும் திறன் […]
Read Moreபிரேசில் நாட்டு ராணுவ தளபதி அவர்கள் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஒரு கண்டிஷனையும் அவர் முன் வைத்துள்ளார். இந்தியா இதற்கு மாற்றாக பிரேசில் தயாரிப்பு எம்பரேயர் விமானம் வாங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய விமானப்படைக்கு தற்போது 40 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் தேவையாக உள்ளன.இதற்காக பிரேசில் தனது C-390M medium Haul விமானத்தை வழங்க முன்வந்துள்ளது.இது தவிர இந்தியாவிற்கு ஆறு அவாக்ஸ் விமானங்கள் […]
Read Moreநிலவில் வெற்றிகரமாக ரோவரை இறக்கி சாதனை புரிந்த பின் தற்போது செவ்வாய் கிரகத்திலும் ரோவரை இறக்கி செவ்வாய்க் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சோமநாத் அவர்கள் கூறியுள்ளார். செவ்வாயில் ரோவரை களம் இறக்கும் திட்டம் தற்போது முதற்கட்டத்தில் உள்ளதாகவும் இஸ்ரோ இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ ஏற்கனவே செவ்வாயை ஆய்வு செய்ய மங்கள்யான் எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது. இது இஸ்ரோவின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது. செவ்வாய் […]
Read Moreஇந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் P8I விமானம் இந்திய கடற்படைக்கு ஒரு ஆகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. இந்திய பெருங்கடல் பகுதி மட்டுமல்லாமல் சீனாவுடனான மோதலின் போதும் லடாக் மற்றும் கிழக்கு இமாலய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு இந்த விமானம் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழகத்தில் அரக்கோணத்தில் உள்ள ஐ என் எஸ் ராஜாளி தளத்திலிருந்து எட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்களின் தாக்கம் திறனை அதிகரிக்கும் பொருட்டு சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் […]
Read Moreஏவுகணை மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதாக ரியர் அட்மிரல் சஞ்சய் மிஸ்ரா அவர்களுக்கு DRDO நிறுவனத்தின் செயலர் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். அந்த நினைவு பரிசில் சில ஏவுகணைகளின் மாதிரிகள் இருந்தன. அந்த நினைவு பரிசில் அக்னி ஏவுகணை வரிசை ஏவுகணைகள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு புதிய ஏவுகணையும் தென்பட்டது அதுதான் அக்னி மார்க் 2 ஆகும். அக்னி 5 ஏவுகணையை விட அக்னி 5 ஏவுகணை மேம்படுத்தப்பட்டதாகும். அக்னி ஐந்தை விட மார்க் 2ஏவுகணையில் […]
Read Moreதமிழகத்தின் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்திலிருந்து MQ-9B ஆளில்லா விமானம் 13000 மணி நேரம் பறந்து இந்திய பெருங்கடல் பகுதியில் இதுவரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவசரமாக இரண்டு ஆளில்லா விமானங்களை இந்திய கடற்படை குத்தகைக்கு எடுத்தது.அன்று முதல் இரு விமானங்களும் தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் 4000 முதல் […]
Read Moreஇந்திய விமானப்படையில் தற்போது செயல்பாட்டில் உள்ள IL-76MD விமானங்கள் விரைவில் படையில் இருந்து ஓய்வு பெற உள்ளன.1980 களில் சோவியத் யூனியனிடம் இருந்து இந்த விமானங்கள் பெறப்பட்டன.விமானப்படையில் சிறப்பாக செயல்பட்ட இந்த விமானங்கள் தற்போது தங்கள் வாழ்நாளில் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது விமானப்படையில் 17 IL-76MD விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவற்றில் பெரும்பான்மையான விமானங்கள் தங்களது 40 வருட சேவை முடியும் தருவாயில் உள்ளன.இவை தவிர விமானப்படையில் தற்போது 11 C-17 Globemaster III விமானங்கள் செயல்பாட்டில் […]
Read More