வரலாற்றில் முதல்முறையாக இந்திய மற்றும் இத்தாலிய கடற்படைகள் CSG கூட்டு பயிற்சி !!

கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கடந்த ஆறாம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கோவா அருகே அரபிக்கடல் பகுதியில் இந்திய மற்றும் இத்தாலிய கடற்படைகள் இடையேயான CSG கூட்டுப் பயிற்சிகள் வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்று முடிந்தன, இந்த இரு தரப்பு கடற்படை கூட்டு பயிற்சிகளில் இருதரப்பிலிருந்து விமானம் தாங்கி கப்பல் படையணிகள் பங்கேற்றது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.

CSG – Carrier Strike Group அதாவது விமானம் தாங்கி கப்பல் படை அணிகள் என்பன திறந்தவெளி மற்றும் ஆழ்கடல் பகுதிகளிலும் சிறிய கடல் பகுதிகளிலும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும் இவை ஒவ்வொரு கடற்படைக்கும் மிக மிக முக்கியமான பலமாகும் இந்தியா சார்பில் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐ என் எஸ் விசாகப்பட்டினம் நாசகாரி போர்க்கப்பலும் பங்கேற்றன இத்தாலிய கடற்படை தரப்பில் ஐடிஎஸ் கவோர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐடிஎஸ் அல்பினோ ஃப்ரிகெட் ரக போர்க்கப்பலும் இந்த பயிற்சிகளில் பங்கேற்றன.

இந்த பயிற்சிகளில் ஒரு பகுதியாக முதல் கட்டமாக துறைமுக செயல்பாடுகள் நடைபெற்றன அப்போது இருதரப்பு கடற்படைகள் மற்றும் கப்பல் குழுவினர் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்கு ஏதுவான நிகழ்வுகள் நடைபெற்றன பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தைகள், கப்பல்களை பார்வையிடும் நிகழ்வுகள், விளையாட்டு கலாச்சார மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் நடைபெற்றன இது தவிர இரு நாட்டின் கடற்படை அதிகாரிகளும் பங்கு பெற்ற கடற்படை நடவடிக்கைகள் சார் அறிவு பரிமாற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இருநாட்டின் விமானம் தாங்கி கப்பல் படையணிகளும் கடல் பயிற்சிகளை தூங்கின இந்த பயிற்சிகள் மிக மிக தீவிரமான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக அமைந்ததாகவும் இருநாட்டு போர்க்கப்பல்களும் பீரங்கி தாக்குதல்கள், வான் பாதுகாப்பு பயிற்சிகள், போர்க்கப்பல் யுத்ததந்திர செயல்பாடுகள், போர்க்கப்பல் நகர்வு செயல்பாடுகள் ஆகியவை அக்டோபர் ஐந்து மற்றும் ஆறு ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்றன, இது தவிர இரு கடற்படைகளின் ஹெலிகாப்டர்களும் பங்கு பெற்ற ஹெலிகாப்டர் நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கடைசியாக இரு விமானம் தாங்கி கப்பல்களின் போர் விமானங்களும் பங்குபெற்ற வான் தாக்குதல் நடவடிக்கைகள் ஆகியவையும் நடைபெற்றன.

இந்தப் பயிற்சியின் மற்றொரு மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இந்திய விமானப்படையும் இத்தாலிய கடற்படை விமான படை அணியுடன் இணைந்து மிகப்பெரிய அளவிலான படை நகர்வுகள் மற்றும் தாக்குதல் நடவடிக்கை பயிற்சி செயல்பாடுகளில் பங்கு பெற்றதாகும், இந்திய கடற்படை சார்பில் மிக் 29 கே MIG-29K ரக போர் விமானங்களும் இத்தாலிய கடற்படை சார்பில் அமெரிக்க தயாரிப்பு F-35B மற்றும் பிரிட்டிஷ் தயாரிப்பு ஏவி 8பி ஹாரியர் AV-8B HARRIER ஆகிய போர் விமானங்கள் பங்கு பெற்றது கூடுதல் தகவலாகும்.