ஏழு பில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட உள்ள சுகாய் விமானங்கள்

இந்திய விமானப்படையில் உள்ள சுகாய் விமானங்களை 7 பில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக விமானப்படை கூறி உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுகாய் விமானங்களுக்கு புதிய அதி நவீன தொழில்நுட்பங்கள் ரேடார்கள் மற்றும் ஏவியானிக்ஸ் பொருத்தப்படும்.

தற்பொழுது இந்திய விமானப்படையில் 272 சுகாய் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் விமானப் படையின் முதுகெலும்பாக உள்ளன. தற்போது இந்த விமானங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வந்தாலும் நவீன போர் முறைக்கு ஏற்றவாறு இந்த விமானங்களை மேம்படுத்துவது அவசியமாகும்.

தற்போது இந்த விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த விமானங்கள் நவீன தொழில்நுட்பங்களை பெறும். இந்த விமானங்களுக்கு புதிய உத்தம் AESA ரேடார் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விமானத்தின் ரேடார் கண்காணிப்பு திறன் மேம்படும்.

முதல் தொகுதியாக 84 விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.அதன் பிறகு 150 விமானங்களின் திறன் மேம்படுத்தப்படும்.