காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ; சோபியானில் என்கவுண்டர்

  • Tamil Defense
  • October 10, 2023
  • Comments Off on காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ; சோபியானில் என்கவுண்டர்

காஷ்மீரின் சோபியானில் இரு பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக கிடைத்த உளவு தகவலை அடுத்து அங்கு ராணுவம் crpf மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய ஆபரேஷனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 9-10 இரவில் இந்த என்கவுண்டர் சோபியானின் அலிஷாபூர் என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதிடமிருந்து இரண்டு ஏகே துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டுள்ளது.