வரும் ஜீலை 17 அன்று இந்திய பிரதமர் திரு நரேந்திய மோடி அவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த பயணத்தின் போது இந்திய கடற்படைக்காக 26 Rafale M விமானங்கள் பல பில்லியன் டாலர்கள் செலவில் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திறந்வெளி டென்டர் முறை அல்லாமல் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் மூலம் இந்த ஆர்டர் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விலை நிலவரம் குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை.
ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள பழைய மிக்-29கே விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்களை இணைக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.இதற்காக ரபேல் விமானங்கள் வாங்கப்பட உள்ளது.