சமீபத்தில் Print எனப்படும் வெளியிட்ட செய்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து M777 ரக பிரங்கிகளை மேம்படுத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்திய தரைப்படையில் ஏற்கனவே 145 M777 பிரங்கிகள் உள்ளன, இவை 152 மில்லிமீட்டர் மற்றும் 39 காலிபர் திறன் கொண்டவை ஆகும் ஆகவே தற்போது இவற்றால் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மட்டுமே தாக்க முடியும்.
ஆனால் இவற்றை 155 மில்லிமீட்டர் மற்றும் 52 காலிபர் திறன் கொண்ட ERCA Extended Range Cannon Artillery அதாவது தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரங்கியாக மேம்படுத்தினால் இந்த பிரங்கிகளால் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட M777 பிரங்கிகளை தயாரிக்கும் BAE நிறுவனம் ஒரு 155 மில்லிமீட்டர் மற்றும் 52 காலிபர் திறன் மற்றும் 5800 கிலோ எடை கொண்ட புதிய பிரங்கியை இந்தியாவிற்கு விற்க முன்வந்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.