
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் முதல் நாடாக இங்கிலாந்து இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.
இது குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அது MBDA storm shadow ஏவுகணையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஏவுகணைகள் ஒரு வேளை வழங்கப்பட்டால் அவற்றை உக்ரேன் எவ்வாறு பயன்படுத்துகிறது என பொறுத்தே பார்க்க வேண்டும்.
ஒரு நீண்ட தூர ஏவுகணை ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் தாக்குதல் நடத்தும் திறன்களை உக்ரேனுக்கு வழங்க முடியும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விநியோக கிடங்குகள் மற்றும் இலக்குகளை தாக்க உதவும்.
இது ரஷ்யாவின் திறனை சீர்குலைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.