இந்த ஆண்டு இறுதிகட்டத்தை நாம் அடைந்துவிட்ட நிலையில் உலகில் பல்வேறு மாற்றங்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன அவற்றை அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்தியா அடுத்த ஆண்டு முதல் முறையாக ஐந்து புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது அவற்றின் பட்டியல் மற்றும் அவற்றை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
Astra Mk2 : அஸ்திரா மார்க் -2 ஏவுகணையானது விமானங்களில் இருந்து வான் இலக்குகளை நோக்கி ஏவப்படும் தொலைதூர ஏவுகணையாகும் இந்த ஏவுகணை தான் AESA ரேடாரை பெறும் முதல் இந்திய வானிலக்கு ஏவுகணையாகும், இதன் தாக்குதல் வரம்பு 160 கிலோமீட்டருக்கும் அதிகமாகும் இதன் காரணமாக இத்தகைய தொலைவுகளுக்கு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகள் கொண்டசொற்ப நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Rudram – 2 : இந்த ரூத்ரம் ஏவுகணை ஏற்கனவே 15 கிலோமீட்டர் உயரத்தில் சோதனை செய்யப்பட்டது அப்போது மாக்-8 வேகத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழித்தது,அடுத்த ஆண்டு இந்த ஏவுகணைகள் சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
NASM – MR : அதிநவீன இடைத்தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் ஏவுகணைகள் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை ஆகும் அடுத்த ஆண்டில் இதன் சோதனைகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
VEDA : இது அடிப்படையில் K -4 மற்றும் AGNI – 5 ஏவுகணைகளை அடிப்படையாக கொண்ட மேம்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட ராக்கெட் ஆகும், இதன் மூலமாக இந்திய ராணுவத்திற்கு தேவையான சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும் இதன் சோதனைகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
K – 5 : மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஏவுகணையானது இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் திறனை பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையாகாது இது இந்தியாவின் அதிக தூரம் செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும். அணு ஆயுத ஏவுகணையாகும், அடுத்த ஆண்டு இதனுடைய சோதனைகளும் துவங்கும் என பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.