PFI பிடியில் சிக்கியுள்ள கேரள காவல்துறை அதிர்ச்சி தகவல்கள் !!

  • Tamil Defense
  • October 6, 2022
  • Comments Off on PFI பிடியில் சிக்கியுள்ள கேரள காவல்துறை அதிர்ச்சி தகவல்கள் !!

சமீபத்தில் நாடு முழுவதும் அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து தீவிர சோதனைகளை நடத்திய நிலையில் பல முக்கிய PFI தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இந்திய அரசு PFI அமைப்பு மற்றும் அதனுடைய இதர எட்டு சகோதர அமைப்புகளையும் இந்தியாவில் இயங்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததது, தொடர்ந்து அனைத்து அமைப்புகளும் கலைக்கப்மடுவதாக PFI நிர்வாகிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது, அதில் கேரள காவல்துறை PFI அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளது தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கேரள காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர்கள், காவலர்கள், சிறப்பு காவலர்கள், உயர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் காவலர்கள் என சுமார் 843 பேர் PFI உறுப்பினர்கள் ஆவர்.

இவர்கள் கேரள காவல்துறையின் ஸ்பெஷல் பிரிவு, உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணியாற்றி வருவதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது என்றால் மிகையாகாது.