உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் ராக்கெட் தாக்குதல் ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் தற்கொலை விமான தாக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிக்க உக்ரைன் இஸ்ரேல் உதவியை நாடி வருகிறது. ஆனால் இஸ்ரேல் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்க மறுத்து வருகிறது அதற்கு முக்கிய காரணமாக ரஷ்யாவை பகைத்து கொள்வதை இஸ்ரேல் விரும்பவில்லை எனவும் உக்ரைனில் உள்ள நாஜி பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் போன்றவை கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் […]
Read Moreசமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் ஆயுத விற்பனை தொடர்பாக நடைபெறவிருந்த தொலைபேசி வாயிலான பேச்சுவார்த்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து இஸ்ரேலுக்கான உக்ரைன் தூதர் யெவ்கென் கோர்னிசுக் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய செயல் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு இஸ்ரேல அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை மேலும் எதிர்காலத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி […]
Read Moreஈரானிய ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் யாஹ்யா ரஹூம் சஃபாவி சமீபத்தில் ஈரான் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறி உள்ளதாகவும் சுமார் 22 நாடுகள் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மீது ஆர்வம் காட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ அகாடமியில் உரையாற்றிய அவர் ஈரானிய ராணுவம் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை சிறப்பாக பயன்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார், இவர் ஈரானிய மத தலைவர் அயத்தொல்லா கொமேனியின் ராணுவ ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் […]
Read Moreகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கிளிக்கோலூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு இவர் ராணுவ வீரர் ஆவார், இவரது தம்பி விக்னேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான DYFIயின் உறுப்பினர் ஆவார், இவர்கள் இருவரையும் கிளிக்கோலூர் காவல்நிலைய காவல்துறையினர் மிகவும் மோசமாக தாக்கி உள்ளனர். அதாவது விக்னேஷை காவலர் மணிகண்டன் காவல்நிலையத்திற்கு வந்து ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்திடுமாறு வர வேண்டும் என கூறியுள்ளார் ஆனால் வழக்கின் விவரங்கள் எதையும் அவர் கூறவில்லை காவல்நிலையம் சென்ற போது தான் […]
Read Moreவரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இந்திய விமானப்படையின் ஜம்மு விமானப்படை தளத்தில் இருந்து முதல்முறையாக போர் விமானங்களை இந்திய விமானப்படை இயக்க துவங்கி உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என இதை நிபுணர்கள் பார்க்கும் நிலையில் முதலாவது சுகோய்-30 Su-30 MKI போர் விமானம் இங்கிருந்து இயங்கி உள்ளது. பாலகோட் தாக்குதலின் போது போர் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா மற்றும் காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா விமானப்படை தளங்களில் இருந்து புறப்பட்டு சென்று தான் இதனால் […]
Read Moreகர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் BCAS Bureau of Civil Aviation Security அதாவது சிவில் வான் போக்குவரத்து பாதுகாப்பு முகமையின் அலுவலகத்திற்கு 40 வயதான ஒரு நபர் நேற்று சென்றார். அங்கு அவர் தான் இந்திய விமானப்படை அதிகாரி எனவும் விங் கமாண்டர் அந்தஸ்தில் பணிபுரிவதாகவும் தனது பெயர் ஃபிரோஸ் காந்தி எனவும் ஸ்பெஷல் ஏர்போர்ட் பாஸ் புதுப்பிக்க வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சிறப்பு ஏர்போர்ட் பாஸ் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை மேலும் இவரின் நடத்தையில் சந்தேகமடைந்த […]
Read Moreநேற்று அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் டூடிங் நகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் இந்திய தரைப்படையின் ரூத்ரா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் இருந்ததாகவும் ஐந்து பேரும் வீரமரணம் அடைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய தரைப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சாலை வசதியற்ற இந்த பகுதிக்கு தங்களால் முடிந்த வேகத்தில் சென்ற மீட்பு குழுவினர் 2 உடல்களை மீட்டனர் […]
Read More