அஸர்பெய்ஜான் போர் குற்றங்கள் 3 குழந்தைகளின் தாயான ராணுவ வீராங்கனை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை !!

  • Tamil Defense
  • September 19, 2022
  • Comments Off on அஸர்பெய்ஜான் போர் குற்றங்கள் 3 குழந்தைகளின் தாயான ராணுவ வீராங்கனை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை !!

அர்மீனியா மீது அஸர்பெய்ஜான் படையெடுத்து போர் நடத்தி வருவது பலருக்கும் தெரிந்த விஷயம் தான், இந்த நிலையில் அஸர்பெய்ஜான் படைகளின் கொடூரமான போர் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் அஸர்பெய்ஜான் படை வீரர்கள் ஒரு அர்மீனிய நாட்டு படையை வீழ்த்தியது அதனை தொடர்ந்து அந்த அர்மீனிய படையணியின் வீரர்களை மிகவும் கொடுரமாக கொன்றனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு அர்மீனிய படை வீராங்கனையை அஸர்பெய்ஜான் படை வீரர்கள் பிடித்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கண்களை நோன்டி கண் இருந்த பகுதியில் கற்களை புகுத்தி விரலை வாட்டி வாயில் திணித்து கொடுரமாக கொன்றுள்ளனர்.

பின்னர் இதனை வீடியோ எடுத்து அதை பகிர்ந்து மிகழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர், இது அர்மீனிய மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லப்பட்ட அர்மீனியா நாட்டு ராணுவ வீராங்கனையின் பெயர் அனுஷ் அபெட்யான் ஆகும், 36 வயதான இவர் மூன்று குழந்தைகளின் தாய் ஆவார், இவருக்கு நிகழந்தது மற்றும் பிற கொடுரங்களை அர்மீனியா தளபதி எட்வர்ட் அல்ரியான் பன்னாட்டு தூதர்களிடம் எடுத்துரைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.