போபால் நாக்பூர் சாலையில் பாலம் கட்டும் பணிகளை துவங்கி இந்திய தரைப்படை !!

மத்திய பிரதேச தலைநகர் போபால் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நர்மதாபுரம் அருகே சுக்தாவா ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த 145 ஆண்டு பழமையான பாலம் கடந்த ஏப்ரல் மாதம் இடிந்து விழுந்தது.

தற்போது இந்திய தரைப்படையின் தெற்கு பிராந்திய கட்டளையகத்தின் கீழ் உள்ள சுதர்ஷன் சக்ரா கோர் படைப்பிரிவை சேர்ந்த தரைப்படை பொறியாளர்கள் படையணி சுக்தாவா ஆற்றுக்கு குறுக்கே சுமார் 90 அடி நீளம் கொண்ட Bailey Bridge பெய்லி பாலத்தை கட்டும் பணிகளை துவங்கி உள்ளனர்.

கடந்த மூன்று மாத காலமாக மத்திய பிரதேச மாநில அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சப்சே பெஹ்தார் ப்ரிகேடை சேர்ந்த பொறியாளர்கள் ரெஜிமென்ட்டின் அதிகாரிகளும் இதற்காக கலந்தாலோசித்து வந்த நிலையில் தற்போது பணிகள் துவங்கி உள்ளன.

இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் விரைவில் பேத்தூல் வழியாக போபால் நாக்பூர் இடையேயான போக்குவரத்து சீர் செய்ரப்பட்டு விரைவாக சரக்கு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.