சீனாவிற்கு எதிராக தனது பலத்தை தொடர்ந்து தைவான் அதிகரித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பரில் தைவான் தனது முதல் சொந்த தாக்கும் நீர்மூழ்கியை சோதனைக்கு உட்படுத்த உள்ளது.
தைவான் சொந்தமாக கட்டியுள்ள முதல் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கியை வரும் செப்டம்பரில் கடலில் இறக்கி சோதனை செய்ய உள்ளது.இந்த தகவலை தைவானின் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.
கடற்சோதனைக்கு பிறகு இந்த பலவகை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.இந்த நீர்மூழ்கி 2 வருடங்களில் படையில் இணையும்.அதாவது 2025ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி தைவான் கடற்படையில் இணைக்கப்படும்.இது தவிர மேலும் ஏழு நீர்மூழ்கி கட்டவுள்ளது தைவான்.
இந்த நீர்மூழ்கியில் அமெரிக்கத் தயாரிப்பு Mark 48 Mod 6 Advanced Heavyweight Torpedo மற்றும் Boeing UGM-84L Sub-launched Harpoon Block II கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கும் என கூறப்படுகிறது.