
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு லஷ்கர் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் போட்டுத் தள்ளியுள்ளனர்.காஷ்மீரீல் பேங்க் மேனேஜர் விஜயகுமார் என்பவர் உயிரிழப்புக்கு காரணமான இரு பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் வீழ்த்தியுள்ளனர்.
முகமதூ லோன் மற்றும் துபாயில் ஆகிய இரு பயங்கரவாதிகளையும் வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுவரை இந்த வருடம் மட்டும் 104 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வீழ்த்தியுள்ளனர்.