இந்தியாவிற்கு நுழைய முயன்ற சீனர்கள்- கைது செய்த பாதுகாப்பு படையினர்

  • Tamil Defense
  • June 13, 2022
  • Comments Off on இந்தியாவிற்கு நுழைய முயன்ற சீனர்கள்- கைது செய்த பாதுகாப்பு படையினர்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரு சீனர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.நேபாளம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரு சீனர்களை இந்திய-நேபாள பாதுகாப்பு படையான சஹாஸ்திரா சீம பால் ( SSB) வீரர்கள் கைது செய்துள்ளனர்.

இந்திய-நேபாள எல்லையில் உள்ள பித்தா,சீதாமாரி என்னுமிடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அவர்களிடம் இருந்து நேபாள பாஸ்போர்ட்,3 ஏடிஎம் கார்டுகள் ,சிகரெட்டுகள் மற்றும் மேலம் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.