புல்வாமாவில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- முழு விவரம்

  • Tamil Defense
  • June 12, 2022
  • Comments Off on புல்வாமாவில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- முழு விவரம்

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த பயங்கர சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் வரை பாதுகாப்பு படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த 2022 பாதுகாப்பு படைகளுக்கு மிகுந்த சவால் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.பயங்கரவாதிகள் தொடர்ந்து பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஜீனைத்,பாசில் மற்றும் இர்பான் ஆகிய மூன்று லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த சண்டையில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.காஷ்மீர் காவல் துறை வீரர் ரியாஸ் அகமது அவர்களின் இறப்புக்கு காரணமானவர்களை தற்போது பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளன.