TATA advanced systems limited மற்றும் L&T நிறுவனங்கள் இணைந்து தயாரித்த 100வது ஆகாஷ் ஏவுகணை லாஞ்சரை இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்துள்ளது.இதற்கு முன் இந்நிறுவனம் இந்திய இராணுவத்திற்கு 49 லாஞ்சர்களை டெலிவரி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதனை ஒட்டி நடந்த விழாவில் 100வது லாஞ்சரை டெலிவரி செய்ததன் முக்கியத்துவம் குறித்தும் இந்தியா சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பது குறித்தும் டாடா மற்றும் L&T நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள புகழ்ந்து பேசினர்.
ஆகாஸ் ஏவுகணையை தொடர்ந்து இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆர்டர் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் அந்த ஏவுகணையின் தரத்தை நாம் அறியலாம்.மேலும் ஆகாஸ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.