முறையான விசாவில் பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகளுடன் ஊடுருவும் காஷ்மீர் இளைஞர்கள் !!

காஷ்மீரை சேர்ந்த இளைஞர்கள் பலர் உயர்கல்வி, திருமணம், உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட காரணங்களை காட்டி முறையான விசாக்களை பெற்று பாகிஸ்தான் செல்கின்றனர்.

ஆனால் அங்கு இந்த இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்ப்பட்டு ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அல்லது ஹவாலா பண பரிமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI இந்த இளைஞர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதவாதத்தில் ஈடுபடுத்துவதன் மூலமாக காஷ்மீர் கிளர்ச்சியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை எனவும் காஷ்மீரிகள் தாமாகவே விரும்பி இயங்குவதாகவும் நிருபிக்க முயலுவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இப்படி முறையான விசாக்களை பெற்று முறையான வழியில் பாகிஸ்தான் சென்ற பதினேழு காஷ்மீர் இளைஞர்கள் திரும்ப நமது எல்லைக்குள் பயங்கரவாதிகளுடன் எல்லையை ஊடுருவ முயன்ற போது இந்திய தரைப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்தியா சில நாட்கள் முன்னர் பாகிஸ்தானிய பல்கலைகழகங்கள் அளிக்கும் உயர்கல்வி படிப்புகள் இந்தியாவில் மேல் படிப்புகளுக்கோ அல்லது பணியில் சேர்வதற்கோ ஏற்று கொள்ளப்படாது என அறிவித்ததும் அதனை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.