கடும் இழப்புகளை சந்தித்த ரஷ்ய சிறப்பு படையணி !!

  • Tamil Defense
  • April 4, 2022
  • Comments Off on கடும் இழப்புகளை சந்தித்த ரஷ்ய சிறப்பு படையணி !!

ரஷ்ய தரைப்படையின் தலைசிறந்த படையணிகளில் ஒன்று 331 கார்ட்ஸ் பாராசூட் ரெஜிமென்ட் ஆகும், தற்போது இந்த படையணியின் புகழுக்கு மிகப்பெரிய பங்கம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் பங்கு பெற்ற இப்படையணி மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து உள்ளது, இந்த படையணியின் 39 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக இப்படையணியின் கட்டளை அதிகாரியான கர்னல். செர்கேய் சூகாரேவ் மார்ச் 13ஆம் தேதி உக்ரைன் படைகளுடனான சண்டையில் கொல்லப்பட்டு உள்ளார்.

பெலாரஸ் நாட்டில் இருந்து உக்ரைனுக்குள் VDV படையினருடன் இணைந்து இந்த படையணியின் வீரர்கள் உள்நுழைந்துனர் க்யிவ் நகரை நோக்கி முன்னேறிய இவர்களை

வழியில் உக்ரைன் படையினர் இடைமறித்து மிகவும் கடுமையான முறையில் கொரில்லா தாக்குதல் நடத்தினர், க்யிவ் நகருக்கு வெளியே நடைபெற்ற சண்டையில் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்த 331 ஆவது கார்ட்ஸ் படையணி ரஷ்ய ராணுவத்தின் தலைசிறந்த படையணிகளில் ஒன்றாகும், எந்த நடவடிக்கைக்கும் முதலாவது தேர்வு செய்யப்படும் படையணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பால்கன்ஸ், செச்சென்யா, க்ரைமியா, டான்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த படையணி என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த படையணியை உக்ரைனியர்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டதாக கூறும் நிலையில் அது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என கூறப்படுகிறது, இழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த அழிவு சாத்தகயமில்லை என கூறுகின்றனர்.