தவறுதலாக பிரம்மாஸ் பாகிஸ்தானுக்குள் பாய்ந்த விவகாரம் விளக்கம் கேட்ட ஃபிலிப்பைன்ஸ் !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on தவறுதலாக பிரம்மாஸ் பாகிஸ்தானுக்குள் பாய்ந்த விவகாரம் விளக்கம் கேட்ட ஃபிலிப்பைன்ஸ் !!

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படையின் பிரம்மாஸ் ஏவுகணை ஒன்று பராமரிப்பு பணிகளின் போது தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானில் நுழைந்தது.

இந்த நிகழ்வை தொடர்ந்து இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்து உள்ள ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இதற்காக ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஷம்பு குமாரன் அவர்களை ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்ஸா அழைத்து விளக்கம் கேட்டுள்ளார்.

தற்போது அங்கிருந்து வரும் தகவல்களின்படி இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் ஃபிலிப்பைன்ஸ் அரசுக்கு திருப்தி அளித்தாகவும் ஒப்பந்தத்திற்கு பிரச்சனை ஏதுமில்லை எனவும் கூறப்படுகிறது.