
கடந்த 2016-2017 காலகட்டத்தில் இருந்து தற்போதைய 2021-2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது.
2016-2017 காலகட்டத்தில் 1500 கோடியாக இருந்த இந்தியாவின் ஆயுத ஏற்றமதி தற்போது சுமார் 12000 கோடி எனும் மதிப்பை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக இந்தியா பிரம்மாஸ் ஏவுகணைகள், கடற்படை கலன்கள், ஹெலிகாப்டர்கள், இரவில் பார்க்கும் கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.