மொரிஷியஸ் நாடு சமீபத்தில் இந்தியாவிடம் குத்தகை அடிப்படையில் ஹெலிகாப்டர் ஒன்றை பெற ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனையடுத்து இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட HAL DHRUV MK-3 கடல்சார் கண்காணிப்பு ஹெலிகாப்டர் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்தது. பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இந்திய விமானப்படையின் C-17 ரக விமானம் மூலமாக மொரிஷியஸ் நாட்டிற்கு இந்தியா அனுப்பி வைத்தது. இந்த ஹெலிகாப்டர் மொரிஷியஸ் காவல்துறையால் பயன்படுத்தி கொள்ளப்படும் ஏற்கனவே அந்நாடு HAL MK3 மற்றும் Do-228 ரக […]
Read Moreஇங்கிலாந்து தன்னிடம் கூடுதலாக இருந்த இருக்கும் தலைகவசங்களை உக்ரைன் ராணுவத்துக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இங்கிலாந்து தரைப்படையின் ராயல் ஆங்கிலியன் ரெஜிமென்ட் 84,000 ஹெல்மெட்டுகளை சேகரித்து உள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு 12,000 தலைகவசங்களை சேகரித்து பெரிய அட்டை பெட்டிகளில் அடைத்து உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஇந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டுள்ள JVPC ரக துப்பாக்கிகளை வாங்க தில்லி காவல்துறை ஆர்டர் கொடுத்துள்ளது. சுமார் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 5000 JVPC – Joint Venture Protective Carbineகளை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்டரை AWEIL – ADVANCED WEAPONS & EQUIPMENTS LIMITED நிறுவனம் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது நாடு உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க உள்ளதாக கூறியுள்ளார். எங்களது பிரார்த்தனைகள் மட்டுமல்ல எங்கள் துப்பாக்கிகள், குண்டுகள், கவச உடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது BUSHMASTER கவச வாகனங்கள் மற்றும் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை சி-17 விமானங்கள் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் […]
Read Moreஅமெரிக்க கடற்படை போலந்து கடற்படையில் சேவையில் உள்ள ஒர்செல் எனும் நீர்மூழ்கி கப்பலை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒ.ஆர்.பி. ஒர்செல் எனப்படும் அந்த நீர்மூழ்கி கப்பலானது சோவியத் காலகட்டத்தை சேர்ந்தது, உலகின் பழமையான கீலோ ரக நீர்மூழ்கி என கூறப்படுகிறது. கீலோ ரக நீர்மூழ்கிகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்பமாகும் போலந்து அப்போது சோவியத் ஆதரவு நாடாக இருந்ததால் ரஷ்யாவின் நோவோகிராட் பகுதியில் கட்டபட்டு போலந்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலை பயிற்சி காரணங்களுக்காக வாங்க உள்ளதாக […]
Read Moreஇந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான ideaForge Technology மூன்று நாடுகளுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்ய ஆர்டர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல்கட்டமாக ஒமன் நைஜீரியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் இன்னும் சில நாடுகளுக்கும் விரைவில் ஏற்றுமதி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கண்காணிப்பு, பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு, மேப்பிங், வீடியோகிராஃபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ட்ரோன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உலகளாவிய ரீதியில் ட்ரோன்கள் மார்க்கெட்டில் சீனாவின் […]
Read Moreதிபத்திய மக்கள் அதிக உயர் மற்றும் அதிக குளிர்ந்த பிரதேசங்களில் சிறப்பாக செயல்படும் தன்மைகளை கொண்டுள்ள காரணத்தால் அவர்களை படைகளில் இணைக்க சீனா விரும்பியது. அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து சீனா தனது ராணுவத்தில் திபெத்தியர்களை வலுக்கட்டாயமாக படைகளில் இணைத்து வருகிறது. தற்போது திபெத் தலைநகர் லாசாவுக்கு அருகே 1000 திபெத் வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் தலைநகர் லாசாவில் 200 திபெத் வீரர்கள் உள்ளதாகவும் இவர்கள் அணைவருக்கும் கொரில்லா சண்டை முறை, உயிர் பிழைத்தல் முறைகள், பாராசூட் மூலம் […]
Read Moreரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை துவங்கிய காலகட்டத்திலேயே தனது அணு ஆயுத படையணிகளை தயாராக இருக்க உத்தரவிட்டது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் உதவுவதை தடுக்கும் ஒரு ரஷ்ய யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்றொரு அனுமானம் முன்வைக்கப்படுகிறது அதாவது உக்ரைன் போரின் போக்கை மாற்ற ரஷ்யா சிறிய ரக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்பது தான் அது. TACTICAL NUKES எனும் சிறிய ரக அணு ஆயுதங்கள் ஐரோப்பாவில் பாதிப்பை […]
Read Moreஉக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ள காரணத்தால் அமெரிக்கா நடத்தவிருந்த பலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை ரத்து செய்து அறிவித்துள்ளது. அமெரிக்க விமானப்படை திட்டமிட்டபடி நடத்தவிருந்த மினிட்மேன்-2 கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையின் சோதனையை பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ரத்து செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஆன் ஸ்டெஃபானெக் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Read Moreஇந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ள அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் காட்டமான விமர்சினத்தை முன்வைத்துள்ளார். அதாவது அந்த விமர்சனங்கள் அனைத்தும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் எந்தவொரு நாட்டுக்கும் ஏற்படும் விளைவுகள் பற்றியதாகும். அந்த வகையில் அவர் பேசும்போது சீனாவின் இளைய பங்காளி தான் ரஷ்யா எனவும் ரஷ்யா மீதான சீனாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அது இந்தியாவுக்கு நல்லதில்லை மேலும் இன்னொரு முறை சீனா இந்தியாவின் எல்லைகளை கடந்தால் ரஷ்யா நிச்சயமாக […]
Read More