தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவ பள்ளி அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி !!

  • Tamil Defense
  • March 29, 2022
  • Comments Off on தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவ பள்ளி அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி !!

தூத்துக்குடி மாவட்டத்தில் விகாசா எனும் தனியார் பள்ளியின் ஒத்துழைப்புடன் ராணுவ பள்ளி அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் சுமார் 100 புதிய ராணுவ பள்ளிகள் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 21 பள்ளிகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய 21 ராணுவ பள்ளிகளில் 7 ஏற்கனவே உள்ள பள்ளிகளை போன்று உண்டு உறைவிட பள்ளியாகவும் மீதமுள்ளவை சாதாரண பள்ளிகளை போலவும் செயல்படும்

மேலும் 12 பள்ளிகள் தொண்டு நிறுவனங்களாலும், 6 பள்ளிகள் தனியாராலும், மூன்று பள்ளிகள் மாநில அரசுகளாலும் அமைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.