உக்ரைன் போரில் கொல்லப்பட்ட மூத்த ரஷ்ய அதிகாரி !!

  • Tamil Defense
  • March 23, 2022
  • Comments Off on உக்ரைன் போரில் கொல்லப்பட்ட மூத்த ரஷ்ய அதிகாரி !!

ரஷ்ய கடற்படையின் கருங்கடல் படைப்பிரிவின் துணை கட்டளை அதிகாரியான கேப்டன் ஆண்ட்ரே பாலி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மரியூபோல் நகரத்திற்கு அருகே நடைபெற்ற பயங்கர சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ரஷ்ய ராணுவத்தின் சார்பாக பொது மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட பாதையை கண்காணிக்கும் போது அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் இது சர்வதேச அளவில் அனுதாபம் தேடும் தந்திரம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.