உக்ரைனில் உள்ள ஸப்பஸிரோஸியா அணு உலை ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு உலை ஆகும் இந்த அணு உலையை தற்போது ரஷ்ய படைகள் கைபற்றி உள்ளனர்.
இதற்கான நீண்ட நேரம் நடைபெற்ற சண்டையின் போது துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன இதனால் ஒரு கட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால் அந்த தீ விரைவிலேயே அணைக்கப்பட்டு நிலைமை கட்டுபாட்டுக்குள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
உக்ரைன் அதிபர் அமெரிக்க தூதர் உள்ளிட்டோரும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இதன் காரணமாக ரஷ்யாவுக்கு கண்டனங்களை தெரிவித்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.