இந்திய கடற்படை நடத்தும் மிலன்-2022 பன்னாட்டு போர் ஒத்திகை வங்க கடலில் நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த போர் ஒத்திகையில் 26 போர் கப்பல்கள், 21 வானூர்திகள் மற்றும் 1 நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பங்கேற்றுள்ளதாக கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
40க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கும் இப்பயிற்சியில் நீர்மூழ்கி எதிர்ப்பு , ஆயுத தாக்குதல், வீரர்கள் பரிமாற்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.