உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் எனும் அந்த மாணவர் உணவிற்காக சென்ற போது கார்கிவ் நகர அரசு அலுவலகத்தின் மீது ரஷ்யா ஏவிய
காலிபர் ரக க்ரூஸ் ஏவுகணை தாக்கி வெடித்ததில் இவரும் சிக்கி உயிரிழந்துள்ளார் மேலும் இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.