சுவீடன் நாட்டின் CV90 ரக ராணுவ வாகனங்கள் இந்திய தரைப்படையின் இலகுரக டாங்கி, எதிர்கால காலாட்படை சண்டை வாகனம் மற்றும் எதிர்கால சண்டை வாகனம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என தெரிவித்துள்ளது. இந்த மூன்று வாகனங்களையும் தனித்தனியாக வாங்கினால் மூன்று முறை தொழில்நுட்ப பரிமாற்றம் சோதனைகள் மூன்று வெவ்வேறு தொழிற்சாலைகள் என பெரும் தொகையை செலவிட வேண்டியதாகும். ஆனால் CV90 ரக வாகனத்தின் சேஸிஸ் மட்டும் வாங்கி அதனை மூன்று வகையாக பயன்படுத்தி கொள்ளலாம் […]
Read Moreரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினிடம் மூன்று அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளார். அதாவது முதலில் மத்திய கிழக்கில் இருந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட விரும்புவோரை டான்பாஸ் பகுதிக்கு கொண்டு வருவது, இரண்டாவது உக்ரைன் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ராணுவ தளவாடங்களை ரஷ்ய ஆதரவு டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் படைகளுக்கு வழங்குவது, மூன்றாவது ரஷ்யாவின் மேற்கு எல்லையோர பகுதிகளில் அதாவது கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாடுகளுடனான பாதுகாப்பை வலுப்படுத்துவது ரஷ்ய அதிபர் விளாடிமீர் […]
Read Moreஇஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கியை சரணடைய வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று கொள்வதன் மூலமாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான யோசனையை இஸ்ரேலிய பிரதமர் உக்ரைன் அதிபரிடம் முன்வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒரு மூத்த உக்ரைனிய அதிகாரி இஸ்ரேலிய நாளிதழிடம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் இதனை முற்றிலுமாக ஆதாரமற்ற தகவல்கள் என கூறி […]
Read Moreபாகிஸ்தான் விமானப்படை நேற்று கம்ரா விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் ஜே-10சி ரக போர் விமானங்களை படையில் இணைத்துள்ளது. இந்த விழாவில் பிரதமர் இம்ரான் கான், தரைப்படை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, விமானப்படை தளபதி ஸாஹீர் அஹமது பாபர் கடற்படை தளபதி அம்ஜத் கான் நியாஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட ஜே10சி ரக போர் விமானமானது நான்காம் தலைமுறை ஏவுகணைகளை சுமக்கும் எனவும் ஜே17 போர் விமானத்தில் உள்ளதை விடவும் பெரிய ஏசா ரேடாரை […]
Read Moreஉக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 16,000 பேர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா உள்ளிட்ட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இப்படி சுமார் 16,000 போராளிகள் குறிப்பாக சிரிய அதிபர் ஆசாத்தின் ஆதரவு படையினர் களம் காண உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு இதற்கான திட்டத்தை முன்வைத்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அதற்கு ஒப்புதல் […]
Read Moreபாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா சூப்பர்சானிக் ஏவுகணையை ஏவியதாக பாக் ராணுவம் குற்றம்சாட்டிய நிலையில் இந்தியா அதை ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் இந்தியாவால் ஏவப்பட்ட ஏவுகணை வழிதவறி பாகிஸ்தானுக்குள் 124 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென்று தரையில் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 124 கிலோமீட்டர் தூரம் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை எவ்வித இடையூறும் இன்றி பயணித்துள்ளது பாகிஸ்தான் விமானப்படையோ அல்லது வான் பாதுகாப்பு அமைப்புகளோ அதனை தடுக்கவில்லை. மேலும் எதிரி நாட்டுடனான […]
Read Moreஇந்த தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே தரைப்படை வாங்கும் தளவாடங்கள் ஆயுதங்களில் 85% இந்திய தயாரிப்பு என கூறியுள்ளார். இந்த தகவலை அஹமதாபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்த அவர் சென்னை மற்றும் லக்னோ பாதுகாப்பு காரிடர்கள் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் கூறினார். தரைப்படை டிசைன் முகமை பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Read Moreசமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் வான்வெளிக்குள் தவறுதலாக ஏவுகணை ஒன்றை ஏவியதாக பாகிஸ்தானை குற்றம்சாட்டிய நிலையில் இந்தியாவும் மன்னிப்பு கோரியது. இந்த ஏவுகணை பயணித்து பகுதியில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்த HIMADS HQ9 மற்றும் LOMADS LY80 ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன. ஆகவே இந்திய ஏவுகணையை மேற்குறிப்பிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் இடைமறிக்கவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது இது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெருத்த அவமானத்தை […]
Read More