உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் ரஷ்யா மீது உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பல வகையான தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ரஷ்யா உடன் வர்த்தகம் மேற்கொள்ளும் பல்வேறு நாடுகளுக்கும் இந்த பொருளாதார தடைகள் சிக்கலை ஏற்படுத்தும் இந்தியா அதில் முக்கியமான நாடாகும். எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, 20,000 ஏகே203 துப்பாக்கிகள், 460 டி90 டாங்கிகள், 2 தல்வார் ரக போர்க்கப்பல்கள், பிரம்மாஸ் ஏவுகணைகளின் ஏற்றுமதி ஆகியவை பிரச்சினைகளை சந்திக்கலாம் […]
Read Moreநாளுக்கு நாள் ரஷ்ய படைகள் மெதுவாக உக்ரைனை கைப்பற்ற முன்னேறி வரும் நிலையில் ஆங்காங்கே மிக கடுமையான குண்டு வீச்சும் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜெர்மனி அரசானது உக்ரைனுக்கு தோளில் வைத்து ஏவப்பட கூடிய சோவியத் காலகட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கிழக்கு ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் கட்டுபாட்டில் இருந்து பிரிந்து மேற்கு ஜெர்மனியுடன் இணைந்து ஒன்றுப்பட்ட ஜெர்மனியாக இணைந்த போது கிழக்கு ஜெர்மனி ராணுவத்திடம் பல்வேறு சோவியத் […]
Read Moreஇஸ்ரேலிய அதிபர் நஃப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் ரகசியமாக சென்று சந்தித்து பேசியுள்ளார். இரண்டு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் பற்றி இரண்டரை மணி நேரம் பேசியதாகவும் இஸ்ரேல் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சமாதான செய்து வைக்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ரெம்ளின் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி ரஷ்யா உக்ரைன் இடையே சமாதானம் செய்து வைக்கும் பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுகொள்ள தயாராக இருப்பதாக இஸ்ரேலிய தரப்பு கூறியதாக […]
Read Moreதெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணை வெளியுறவு செயலரான டொனால்ட் லூ சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆஜராகி வெளியுறவு விவகாரங்கள் பற்றி விளக்கமளித்தார். அப்போது அமெரிக்க அரசு உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை அமெரிக்காவின் பக்கம் சேர்க்க கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவின் பக்கம் இல்லை என்று நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியா ரஷ்யா இடையிலான உறவு பிரத்தியேகமானது அதனை பயன்படுத்தி இந்தியா உக்ரைன் விவகாரத்தில் ஒரு முக்கியமான தீர்வை […]
Read Moreஉக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அரசானது நேட்டோ அமைப்பு அந்நாட்டு வான் பரப்பை NO FLY ZONE ஆக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் உக்ரைன் வான் வெளியை NO FLY ZONE ஆக அறிவிக்க முடியாது எனவும் அதற்கு காரணம் உக்ரைன் வான் வெளியில் நேட்டோ போர் விமானங்களை அனுப்பி ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டிய நிலை நிச்சயமாக […]
Read Moreஉக்ரைன் வான்வெளியை எந்த மூன்றாவது தரப்பும் NO FLY ZONE ஆக அறிவிக்க முயன்றால் அது ரஷ்யாவுடன் போரை விரும்பும் செயலாகவே கருதப்படும் எனவும், இதற்கு பதிலடியாக மிக மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னர் உக்ரைனிய அதிபர் ஸெலன்ஸ்கி தனது நாட்டின் வான் வெளியை நேட்டோ NO FLY ZONE ஆக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை […]
Read More