உக்ரைனில் நட்பு நாடுகளின் படைகளுக்கு அவசியம் இல்லை உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி உக்ரைனில் நட்பு நாடுகளுடைய படைகள் குவிக்கப்படுவதற்கு அவசியம் ஏதும் இல்லை என கூறியுள்ளார்.

அப்படி அந்நிய நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி உலக அமைதிக்கே கேடு விளைவித்து விடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ரஷ்யாவிற்கு நாங்களே அவர்களுக்கு தேவையான காரணிகளை ஏற்படுத்தி கொடுக்க விரும்பவில்லை எனவும் ஆனால் உதவிகள் தொடர்ந்து தேவை எனவும் கூறியுள்ளார்.