இன்று இந்திய நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய கடற்படை அணியை ஒரு பெண் அதிகாரி வழிநடத்த உள்ளார்.
லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா தான் அந்த அதிகாரி ஆவார் இவர் இந்திய கடற்படையின் 314ஆவது வான்படை அணியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
96 வீரர்கள், மூன்று ப்ளட்டூன் கமாண்டர்கள் என 99 பேர் கொண்ட இந்திய கடற்படை அணியை லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா கம்பீரமாக இன்று வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.