பிரம்மாஸ் சூப்பர்சானிக் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டு இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்து தாக்கி அழித்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்திய இந்த சோதனையில் ரஷ்யாவின் NPOM விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.
இரண்டு அமைப்புகளுமே தொடர்ந்து பிரம்மாஸ் ஏவுகணையை மேம்படுத்தி மேம்படுத்தி அதன் திறன்களை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சோதனை வெற்றி பெற்றதையடுத்து விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.