மியான்மர் நாட்டில் பதுங்கி இருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
நேற்று அதிகாலை இந்திய எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் சீனாம் கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இந்திய பாரா சிறப்பு படையினர் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மியான்மர் ராணுவமும் இந்த தாக்குதலில் கூட்டாக ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.