இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் பேட் படை பயங்கரவாதியை இந்திய இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதியை போட்டுத் தள்ளியுள்ளனர்.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி மொகமது ஷபிர் மாலிக் எனவும் , அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவனிடமிருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் 7 கிரேனேடுகள் மீட்கப்பட்டுள்ளனர்.இதன் பிறகு பாக் இராணுவத்தை ஹாட்லைனில் தொடர்பு கொண்ட இந்திய இராணுவ வீரர்கள் பயங்கரவாதியின் உடலை எடுத்துச் செல்ல கூறியுள்ளனர்.