கடந்த ஆண்டில் எல்லை பாதுகாப்பு படை சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான பேதை பொருட்களை வங்கதேச எல்லையோரம் கைபற்றி உள்ளதாக அப்படையின் ஐஜி மிருதுல் சோனோவால் தெரிவித்துள்ளார்.
கச்சார் மற்றும் மிசோரம் பகுதிக்கான படைப்பரிவு சுமார் 6 லட்சம் யாகா மாத்திரைகள், 340 கால்நடை தலைகள், 480 கிலோ கஞ்சா, 150 கிலோ கஞ்சா என ஒட்டுமொத்தமாக 47 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
1.9 கிலோ ஹெராயின், 609 கிராம் ப்ரவுன் சுகர் , 1569 மது பாட்டில்களும், துப்பாக்கிகள் தோட்டாக்கள், வெட்டரிவாள்களும் அடக்கம் என அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் காவல்துறை, வருவாய் உளவுத்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டதாகவும் வருங்காலத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினார்.