Day: January 26, 2022

சௌரிய சக்ரா விருது பெற்ற ஆறு இராணுவ வீரர்கள்

January 26, 2022

இந்தியாவில் அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மூன்றாவது இராணுவ உயரிய விருதான சௌரிய சக்ரா ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில் ஐந்து வீரர்கள் வீரமரணத்திற்கு பிறகு இந்த விருதை பெறுகின்றனர். நாய்ப் சுபேதார் ஸ்ரீஜித் , சிபாய் ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகிய இரு வீரர்களும் மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள்.இராஜ்புத் ரெஜிமென்டை சேர்ந்த ஹவில்தார் அனில் குமார் என்ஜினியரிங் கோரை சேர்ந்த ஹவில்தார் காசிரே பம்மனல்லி மற்றும் ஜாட் ரெஜிமென்ட்டை சேர்ந்த பிங்கு குமார் ஆகியோருக்கு வீரமரணத்திற்கு பிறகு விருது […]

Read More

பத்ம விபூசன் விருது பெற்ற மறைந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்

January 26, 2022

இந்திய பாதுகாப்பு படைகளின் முதல் ஒருங்கிணைந்த படைத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு ( மரணத்திற்கு பிறகு ) பத்ம விபூசன் வழங்கப்பட்டது.குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த படைத் தளபதி சிடிஎஸ் பிபின் ராவத் அவர்களுக்கு பத்ப விபூசன் வழங்கப்பட்டது.இது இரண்டாவது உயரிய சிவிலியன் விருது ஆகும். சிடிஎஸ் ராவத் அவர்கள் தமிழகத்தின் ஊட்டியில் நடைபெற்ற வானூர்தி விபத்தில் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். […]

Read More

குடியரசு தின அணிவகுப்பில் மனம் கவர்ந்த நிகழ்வு; மனம் திறந்த இஸ்ரேலிய தூதர் !!

January 26, 2022

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நோவர் கிலோன் இன்று தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தனது மனம் கவர்ந்த நிகழ்ச்சி பற்றி பதிவிட்டுள்ளார். அதில் ஒரு முன்னாள் இஸ்ரேலிய ராணுவ பாரா படை வீரராக இந்திய பாரா படையினர் இஸ்ரேலிய தயாரிப்பு டாவர்-21 துப்பாக்கிகளுடன் அணிவகுத்தது தனது மனதை கவர்ந்ததாக கூறினார். இந்த வருடம் புதிய சண்டை சீருடையுடன் தரைப்படையின் 23ஆவது பாரா ஏர்போர்ன் படையணி வீரர்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கு பெற்றது […]

Read More

மறைந்த முன்னாள் சீன அதிபர் சோ என்லா மீதான கொலை முயற்சி கண்டுபிடித்த இந்திய உளவுத்துறை அதிகாரி சொல்லப்படாத கதை !!

January 26, 2022

மறைந்த முன்னாள் சீன அதிபர் சோ என்லா மீதான கொலை முயற்சியின் மர்ம முடிச்சுகளை தனது திறமையான விசாரணையால் கட்டவிழ்த்த இந்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ்வர் நாத் காவோவின் கதை இது. கடந்த 1955ஆம் ஆண்டு சீன அதிபர் சோ என்லாய் இந்திய விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான காஷ்மீர் இளவரசி (KASHMIR PRINCESS) எனப்படும் அமெரிக்க Lockheed நிறுவன தயாரிப்பான L-749A CONSTELLATION விமானம் ஒன்றில் பயணிக்க இருந்தார், ஆனால் இந்த விமானம் மர்மமான முறையில் […]

Read More

விண்வெளியை ஆயுதமயமாக்குவது இஸ்ரோவின் வேலை அல்ல இஸ்ரோ தலைவர் !!

January 26, 2022

இஸ்ரோ தலைவர் திரு.சோம்நாத் அவர்கள் சமீபத்தில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார், அப்போது இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். விண்வெளியை அமைதியான அல்லது ராணுவ ரீதியான காரணங்களுக்கும் பயன்படுத்தலாம் ஆனால் இஸ்ரோவை பொறுத்தவரை விண்வெளி ஆராய்ச்சி தான் தலையாயது ஆகவே அமைதியான நோக்கங்களுக்காகவே செயல்படுவோம் என்றார். மேலும் உலகளாவிய ரீதியில் விண்வெளி சுற்றுலாவுக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் இஸ்ரோவை பொறுத்தமட்டில் அதற்கான நோக்கம் என்பது ஆராய்ச்சி ரீதியானது ஆகவே விண்வெளி சுற்றுலாவில் ஈடுபட போவதில்லை […]

Read More

தனது ஜே-20 ஸ்டெல்த் போர் விமானங்களில் லேசர் ஆயுதங்களை இணைக்க விரும்பும் சீனா !!

January 26, 2022

சீனாவின் ஐந்தாம் தலைமுறை ஜே-20 ஸ்டெல்த் போர் விமானங்கள் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து கொண்டே உள்ளன, இதற்கு அவற்றின் மேம்பாட்டு பணிகள் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை போர் விமானங்கள் தொடர்ந்து இரவு நேர நடவடிக்கைகள் மேள்கொள்ளும் திறன்களை பரிசோதிப்பது, என்ஜின்களை மேம்படுத்தி வரும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த வகை விமானங்களில் சீனா லேசர் ஆயுத அமைப்புகளை இணைக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, மேலும் மேம்படுத்தப்பட்ட ரேடார் […]

Read More

ஐடியாஃபோர்ஜ் நிறுவனத்தின் சுதேசி ஸ்விட்ச் – 1.0 ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்த தரைப்படை !!

January 26, 2022

இந்திய தரைப்படை தனியார் துறை நிறுவனமான ஐடியாஃபோர்ஜின் ஸ்விட்ச் – 1.0 ஆளில்லா விமானத்தின் அதிய உயரம் செல்லும் ரகத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றை சீன எல்லையோரம் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இவற்றை களமிறக்கி கண்காணிப்பை பலப்படுத்த உள்ளதாக ராணுவ அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய ராணுவம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஸ்விட்ச்-1.0 ட்ரோன்களை மும்பையை சார்ந்த இந்த நிறுவனத்திடம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. […]

Read More

ஜெனரல் பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு !!

January 26, 2022

கடந்த ஆண்டு இறுதியில் ஊட்டி வெலிங்கடன் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதலாவது கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். தற்போது இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை மற்றும் நாட்டின் பாதுகாப்பில் கொடுத்த பங்களிப்பை வெகுவாக மதித்து இந்திய அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷணை வழங்க முடிவு செய்துள்ளது. இவருடன் பல்வேறு முக்கிய தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Read More

குடியரசு தின அணிவகுப்பில் கடற்படை அணியை வழிநடத்த உள்ள கம்பீர பெண் அதிகாரி !!

January 26, 2022

இன்று இந்திய நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய கடற்படை அணியை ஒரு பெண் அதிகாரி வழிநடத்த உள்ளார். லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா தான் அந்த அதிகாரி ஆவார் இவர் இந்திய கடற்படையின் 314ஆவது வான்படை அணியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். 96 வீரர்கள், மூன்று ப்ளட்டூன் கமாண்டர்கள் என 99 பேர் கொண்ட இந்திய கடற்படை அணியை லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா கம்பீரமாக இன்று வழிநடத்த உள்ளார் என்பது […]

Read More

வியட்நாமில் இந்திய ராணுவம் சொல்லப்படாத கதை !!

January 26, 2022

இரண்டாம் உலகப்போரின் இறுதிகட்டத்தில் வியட்நாமில் இருந்த ஜப்பானிய படைகள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 20ஆவது டிவிஷனிடம் சரணடைந்தனர். ஆகவே போர் கைதிகளை மேற்பார்வையிடுவது வியட்நாமில் அமைதியை நிலை நாட்டுவது போன்ற பணிகளிலும் வியட்நாமை காலனியாக்கிய ஃபிரெஞ்சு படையினயை வியட்நாம் மக்களிடம் இருந்து பாதுகாப்பதும் இவர்களின் பொறுப்பாக இருந்தது. போர் முடிவுற்ற நிலையிலும் கூட வியட்நாமியர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஃபிரெஞ்சு மக்கள் மற்றும் வீரர்களை இந்திய படையினர் மீட்க வேண்டி இருந்தது இதனால் பல முறை பல பகுதிகளில் சண்டை […]

Read More