
1971 இந்திய பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வங்கதேச விடுதலை போரில் பங்கேற்ற வைஸ் அட்மிரல் ஶ்ரீ ஹரிலால் சர்மா ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இயற்கை எய்தினார்.
அவருக்கு வயது 99 ஆகும், 1971 வங்கதேச விடுதலை போரில் இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் கொடி அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது முதிர்ச்சி காரணமாக திங்கட்கிழமை அன்று மாலை 6.20 மணியளவில் அவர் இயற்கை எய்தினார் இவர் கிழக்கு கடற்படை அணியின் கொடி அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.