
அனந்தநாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஒரு பாக் பயங்கரவாதி உட்பட மூன்று ஜெய்ஸ் பயங்கரவாதிகளை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர்.
இது தவிர குல்கமில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
அனந்தநாக்கில் நௌகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது என்கௌன்டர் தொடங்கியுள்ளது.
இந்த சண்டையில் ஒரு காவல்துறை வீரர் காயமடைந்தார்.