சோபியானில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயங்கர மோதல்

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on சோபியானில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயங்கர மோதல்

சோபியானில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

சோபியான் மாவட்டத்தில் செக் இ சொலன் எனும் கிராமத்தில் உளவுத் தகவலின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையும் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்ட பின்பு அவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.ஆனால் அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர்.

14 மணி நேரம் தொடர்ந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.