எல்லை கட்டுப்பாட்டுக் கோடு நோக்கி நகரும் 200 பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிரான போரில் தலிபான்களுக்கு உதவிய பயங்கரவாதிகள் குறித்து இந்திய பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இப்போது, முதன்முறையாக, தலிபான்கள் ஆட்சியில் இருப்பதால், ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தின் துப்பாக்கி ஏந்திய சுமார் 200 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்துள்ளனர். தற்போது நிகியல் மற்றும் கோட்லியில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் உள்ள அவர்கள் சிறு குழுக்களாக இந்தியாவுக்குள் ஊடுருவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீப காலங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயால் அல் பத்ர் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்களுடன், உளவுத்துறை அறிக்கைகளின்படி, இன்னும் 10 அல்லது 12 பயங்கரவாதிகள் உள்ளனர், இவர்கள் நிச்சயமாக ஆப்கானியர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மற்றொரு உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
காஷ்மீரி பண்டிட்டுகள், அரசியல் ஆர்வலர்கள், ராணுவம் மற்றும் போலீஸ் படைகளுக்கு தகவல் தருபவர்களாக பணிபுரியும் உள்ளூர்வாசிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவை தெளிவாக “மென்மையான இலக்குகள்” என்பது புலப்படுகிறது.. மேலும் அச்சத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியாகும். கோடை மாதங்களில் சில தாக்குதல்கள் நடந்தன, ஆனால் பொதுமக்களைக் கொன்றதற்குக் காரணமானவர்களில் பெரும்பாலானவர்களை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர்.