இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகள் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கான்வாய் மீது கொடுர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு கட்டளை அதிகாரி அவரது மனைவி மற்றும் மகன் வேறு நான்கு வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதற்கு NSCN-K மற்றும் PLA ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றன. இந்த அமைப்புகளுக்கு மியான்மரில் முகாம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மருடன் இந்தியா சுமார் 1600 கிலோமீட்டர் நீளம் […]
Read Moreமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உத்தர பிரதேச மாநிலம் அமேதி நகரம் சண்டை துப்பாக்கி தயாரிக்கும் மையமாக உருவெடுக்க உள்ளது. நியுஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கலாஷ்னிகோவ் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் மரியா வோரோபியேவா AK-203 வரலாற்று சிறப்புமிக்க AK-47 துப்பாக்கியை விட சிறப்பானதாக இருக்கும் என கூறினார். AK-203 ரக துப்பாக்கிகள் உலகின் முன்னனி துப்பாக்கிகளுக்கு இணையானது இதனால் 7.62 மில்லிமீட்டர் ரக தோட்டாக்களை சுட கூடியது. மேலும் இந்த துப்பாக்கியில் பல்வேறு வகையான சென்சார்கள் […]
Read Moreஇந்தியா உள்நாட்டிலேயே போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் அதிநவீன ஏசா ரக ரேடாரை சொந்தமாக தயாரித்துள்ளது. இந்த ஏசா ரேடாருக்கு உத்தம் என பெயரிட்டு உள்ளனர். இதனை மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இந்த ரேடார் நமது சொந்த தயாரிப்பான இலகுரக தேஜாஸ் மார்க்-1 மற்றும் கடற்படையின் மிக்-29, ஐந்தாம் தலைமுறை ஆம்கா ரக போர் விமானங்களில் இணைத்து பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் படையில் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிக உயர பகுதிகளில் ஒரு சிறப்பு நடவடிக்கை குழுவை எல்லைக்கு அப்பால் களமிறக்கும் யுக்திகளை முப்படைகள் கூட்டாக மேற்கொண்டன. இந்த பயிற்சியில் இந்திய தரைப்படை பாரா சிறப்பு படையினர் கடற்படையின் மார்கோஸ் விமானப்படையின் கருட் கமாண்டோக்கள் மற்றும் காலாட்படையினர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை தரைப்படையின் சினார் கோர் நடத்தியது. அப்படையின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி பி பான்டே நேரடியாக பயிற்சிகளை கண்காணித்தார். இந்த பயிற்சியின் மூலமாக முப்படைகள் இடையேயான […]
Read Moreபாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராய் காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் காஷ்மீர் முன்னேற்றம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது 370 ஆவது சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்த பின்னர் இதுவரை சுமார் 350 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதை போல பயங்கரவாத செயல்களுக்கான நிதியாக போலி கணக்குகளுக்கு வரும் நன்கொடைகளும் பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Read Moreகுன்னூர் அருகே வானூர்தி விபத்து தொடர்பாக அமைச்சர் இராஜ்நாத் சிங் இன்று இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க உள்ளார். இன்று மாலை தளபதி ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அவர்களின் உடல் தலைநகர் கொண்டு செல்லப்பட உள்ளது.டெல்லி கன்டோன்மென்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கு முன்பு மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்த முப்படை தளபதிகளும் இன்று மெட்ராஸ் ரெஜிமென்ட் செல்கின்றனர்.
Read Moreவானூர்தி விபத்தில் இருந்து தளபதி ராவத் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவர் கூறியுள்ளார். மீட்கப்பட்ட உடனயே ராவத் அவர்கள் தனது பெயரை கூறியுள்ளார்.தளபதி ராவத் தவிர க்ரூப் கேப்டன் வருண் சிங் அவர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Read Moreநேற்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கடன் பகுதியில் அமைந்துள்ள DSSC கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய கூட்டு படை தலைமை தளபதி அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் பகுதியில் துரதிர்ஷ்டவசமாக தரையில் விழந்து வெடித்து விபத்துக்குள்ளானது மேலும் எரிபொருள் கசிவால் தீப்பிடித்து எரிந்து கருகியது. இதில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் (தலைவி ராணுவ மனைவிகள் […]
Read Moreதைவான் மற்றும் இந்தியா ஆகியவை சீனாவின் எதிரி நாடுகள் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் சில செய்திகள் தற்போது மீண்டும் வெளிச்சதிற்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தைவான் நாட்டின் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ஷென் யி மிங் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் ஜெனரல் ஷின் யி மிங், இரண்டு மேஜர் ஜெனரல்கள் மற்றும் நான்கு பேர் மரணமடைந்தனர். தற்போது ஜெனரல் ராவத் பயணித்த ஹெலிகாப்டரும் மலைப்பகுதியில் தான் […]
Read Moreநேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத்துடன் ப்ரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடர் உயிரிழந்தார். ப்ரிகேடியர் லிடர் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத்தின் துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஆவார். இவர் சீன எக்ஸ்பர்ட் ஆவார்.CLAWS அமைப்பில் சீனாவின் விண்வெளி எதிர்ப்பு திறன்கள் பற்றி சமீபத்தில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். மேலும் விரைவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று தனது அடுத்த பணியை நோக்கி செல்லவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Read More