சீனா இந்தியா உடனான எல்லையோரம் மூன்று கட்ட எல்லை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ரேடார்கள், அகச்சிவப்பு கதிர்கள் அமைப்புகள் மற்றும் Pan Tilt Zoom (PTZ) Camera ஆகியவை கொண்ட மூன்று கட்ட கண்காணிப்பு அமைப்பை நிறுவி வருகிறது. முதல் கட்டத்தில் சீன தரைப்படையின் முன்னனி நிலைகளில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு கண்காணிக்கும் திறன் கொண்ட ரேடார்கள் இருக்கும் எனவும், இரண்டாம் கட்டத்தில் 3 முதல் 6 கிலோமீட்டர் தெலைவு […]
Read Moreசீனா தனது எல்லையோர உள்கட்டமைப்பு மட்டுமின்றி வான் மற்றும் நிலப்பகுதி கண்காணிப்பு அமைப்புகளையும் பல மாதங்களாக மேம்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களின்படி சீன தரைப்படை மற்றும் சீன விமானப்படை ஆகியவற்றுக்கு சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் ஒர் நாடு தழுவிய மிகப்பெரிய வான் பாதுகாப்பு வலைபின்னலை உருவாக்குவதே ஆகும். மேலும் சீனா இந்திய எல்லையோரம் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவி வருகிறது. கடந்த வாரம் வெளியான பென்டகன் அறிக்கை ஒன்றில் […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சகம் தடை பட்டியலில் இருக்கும் தளவாடங்கள் உடனடியாக தேவைப்படுமானால் அவற்றை இறக்குமதி செய்ய முப்படைகளுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் அல்லது தளவாடங்களை இந்திய நிறுவனங்களால் தகுந்த காலத்தில் தேவையான எண்ணிக்கையில் டெலிவரி செய்ய முடியாத பட்சத்தில், படைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அத்தகைய தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்ய DIC கமிட்டி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே […]
Read Moreஇந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் அடுத்த ஆண்டு கடல்சார் தியேட்டர் கட்டளையகம் செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளார். இந்த கடல்சார் தியேட்டர் கட்டளையகம் இந்திய தரைப்படை விமானப்படை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகியவற்றின் தளவாடங்களை ஒருங்கிணைக்கும். மேலும் இந்த கடல்சார் தியேட்டர் கட்டளையகமானது இந்திய கடற்படையின் கடலுக்கு செல்லும் அனைத்து வகையான கலன்கள் மற்றும் வானூர்திகளுக்கு ஒற்றை புள்ளி கட்டளையகமாகவும் விளங்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டளையகம் முப்படைகள் இடையேயான […]
Read Moreஆசியாவில் மிக முக்கியமான சக்திகளில் ஒன்றாக இந்தியா எழுச்சி பெற்றுள்ள நேரத்தில் இந்திய கடற்படையின் முக்கியத்துவம் அதற்கேற்ப அதிகரித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் மிக வலிமையான நிலையில் உள்ள இந்திய கடற்படை தற்போது மிகப்பெரிய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுகொண்டு செயல்படும் நிர்பந்தத்தில் உள்ளது என்றால் மிகையாகாது. கடற்படை என்றாலே அதிகமாக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் படையாகும். அதுவும் தற்போதைய காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. சீன கடற்படை கப்பல்கள் மட்டுமின்றி சீன மீன்படி மாஃபியா கும்பல்களின் […]
Read Moreஇந்திய கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளையகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் ஆவார். இவர் கல்வான் மோதலுக்கு பிறகான இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் பற்றி பேசினார். அப்போது அவர் இந்திய கடற்படை மிகவும் வலுவான ஆழமான பங்காற்றியதாகவும் ஆனால் இந்த பிரச்சினையில் அதிகம் மறக்கப்பட்ட படை கடற்படை தான் எனவும் குறிப்பிட்டார். இந்திய கடற்படை கடலில் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு வலு சேர்த்தன.மேலும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தியது என்றார். மேலும் […]
Read Moreஇந்திய தரைப்படை 155 மில்லிமீட்டர் பிரங்கிகளில் இருந்து சுடக்கூடிய GPS உதவியுடன் வழி அறிந்து செல்லும் 1966 துல்லிய தாக்குதல் குண்டுகளை வாங்க விரும்புகிறது. தற்போது இந்திய தரைப்படையின் ஆர்ட்டில்லரி ரெஜிமென்ட் அதாவது பிரங்கி படையில் இத்தகைய எந்த ஒரு குண்டும் பயன்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக தரைப்படை பயன்படுத்தி வரும் பிரங்கி குண்டுகளின் துல்லியம் சற்றே குறைவாகும். ஆனால் இந்த அதிநவீன குண்டுகள் மூலமாக இலக்கை தவிர வேறு எங்கும் சேதம் ஏற்படாத அளவுக்கு […]
Read Moreஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்தியா ரஷ்யாவிடம் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு வாங்கினாலும் CAATSA விதியின் கீழ் தடை விதிக்கும் வாய்ப்பு குறைவு என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை அமெரிக்காவின் நிலைப்பாடு உறுதியாக தெரியாத நிலையில் அமெரிக்கா இந்த ஒரு ஒப்பந்தத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க தயாராக உள்ளதாகவும், அதற்கு பின்னர் இந்தியா ரஷ்யாவுடன் எந்த ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அதற்கு ஒரு போதும் எத்தகைய தளர்வோ விலக்கோ […]
Read Moreஈரான் தனது கிழக்கு பகுதியில் ஆஃப்கானிஸ்தான் உடன் 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஈரானிய எல்லையோர மாகாணமான நிம்ரோஸில் தாலிபான்கள் மற்றும் ஈரான் படைகள் இடையே மோதல் நடைபெற்றுள்ளது. ஈரானிய விவசாயிகள் ஆஃப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியதாகவும் இதனால் தாலிபான்கள் சுட்டதாகவும் அதற்கு ஈரான் படைகள் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலுக்கு பிறகு உடனடியாக இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையினரும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி […]
Read Moreஇந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இந்திய கடற்படை பெண் அதிகாரிகளை தனது அனைத்து பிரிவுகளிலும் ஏற்று கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இந்திய அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்க முயன்று வருகிறது அதற்கேற்ப இந்திய கடற்படையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 28 பெண் கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் 15 முன்னனி போர் கப்பல்களில் பணிபுரிவதாகவும் விரைவில் இந்த எண்ணிக்கை உயரும் எனவும் தெரிவித்தார்.
Read More