Day: December 1, 2021

விமானங்களுக்கான ஜெட் என்ஜினை உருவாக்க உள்ள இந்தியா !!

December 1, 2021

தற்போது நமது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் அமெரிக்க தயாரிப்பு ஜெட் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எதிர்கால தேவைகளை கணக்கில் கொண்டு உள்நாட்டிலேயே விமானங்களுக்கான ஜெட் என்ஜினை தயாரிக்க இந்தியா முயன்று வருகிறது. இதை ஒரு வெளிநாட்டு என்ஜின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை ஆம்கா, இலகுரக தேஜாஸ் ஆகியவற்றிற்காக தயாரிக்க உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேஜாஸின் சக்தி தேவைகள் அதிகமாக உள்ள நிலையில் […]

Read More

விரைவில் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு பணி ஆரம்பம் !!

December 1, 2021

பாதுகாப்பு துறை இணை அமைச்சர் திரு. அஜய் பாட் நாடாளுமன்றத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களின் இணைப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார், அப்போது அவர் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டருக்கான ஆரம்பக்கட்ட இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ,ஆகவும் விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும், 2022-2023 வாக்கில் நான்கு லிமிடெட் சீரீஸ் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் எனவும், 2023-2024 வாக்கில் 8 லிமிடெட் சீரீஸ் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் எனவும் கூறினார். மேலும் இவை […]

Read More

100 க்கும் அதிகமான காவலர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை கடத்திய தாலிபான்கள் !!

December 1, 2021

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஆஃப்கானிஸ்தானில் சுமார் 100க்கும் அதிகமான காவலர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை கடத்தி உள்ளதாக HRW எனும் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. முந்தைய ஜனநாயக ஆட்சியின் போது அரசு ராணுவம் காவல்துறை உளவுத்துறை ஆகியவற்றில் பணியாற்றிய ஆஃபகானியர்க ள தொடர்ந்து குறிவைப்பதாக தாலிபான்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதற்காக முந்தைய அரசின் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பற்றிய தரவுகளை தாலிபான்கள் பயன்படுத்தி வருவதாகவும் அதனை கொண்டு பட்டியல் தயாரித்துள்ளதாகவும் […]

Read More

உக்ரைனிய கப்பல் என்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஓப்பந்தம் !!

December 1, 2021

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஸோரியா மாஷ்ப்ரோயெக்ட் நிறுவனத்தின் என்ஜின்களை தான் இந்திய கடற்படை தனது கப்பல்களில் இணைத்து பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க உக்ரைனிய ஸோர்யா மாஷ்ப்ரோயெக்ட் மற்றும் நமது பாரத் கனரக மின்னனு லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் உக்ரைன் குழு இந்தியா வந்த போது கையெழுத்தாகியது, ஆகவே ஆறு ஆண்டுகளுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் இரண்டு புதிய தல்வார் […]

Read More

மீண்டும் ஆஃப்கனில் தூதரகத்தை திறக்க இந்தியா திட்டம் !!

December 1, 2021

ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் தங்களது தூதரகத்தை திறக்க முயன்று வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் மீண்டும் ஆஃப்கானிஸ்தானில் தனது தூதரகத்தை திறக்க பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே அங்கு ரஷ்யா, சீனா, ஈரான், பாகிஸ்தான், கத்தார், துருக்கி, துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அங்கு இயங்கி வருகின்றன . மேலும் அமெரிக்கா கத்தாரின் தூதரகத்தை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானில் […]

Read More

போர் பதற்றம்; உக்ரைனில் நேட்டோ சிகப்பு கோட்டை தாண்டினால் ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் புடின் எச்சரிக்கை !!

December 1, 2021

மேற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மிக கடுமையான பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது உக்ரைனில் சிகப்பு கோட்டை நேட்டோ தாண்டினால் ரஷ்யா மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் உக்ரைனை சார்ந்த ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் […]

Read More

557 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கப்பட்டது !!

December 1, 2021

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்திய தரைப்படை தனது 557பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பணி நிரந்தர உத்தரவு சான்றிதழை வழங்கியுள்ளது. இது பற்றி மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் இதில் எவ்வித தாமதமும் இருக்காது என்றார் மேலும் பணி நிரந்தரம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடிய 72 பெண் அதிகாரிகளில் 63 தகுதி வாய்ந்த பெண் அதிகாரிகள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது வரை மருத்துவம், நீதி […]

Read More

நேட்டோவுடன் பதற்றம் -வரலாற்று சிறப்புமிக்க மிக்-31 விமானங்களை மேம்படுத்தும் ரஷ்யா !!

December 1, 2021

ரஷ்யா நேட்டோ இடையிலான உரசல் அதிகரித்து வரும் நேரத்தில் தனது வரலாற்று சிறப்புமிக்க மிக்31 போர் விமானங்களை தரமாக மேம்படுத்தி வருகிறது. இந்த மிக்-31 போர் விமானங்களை மேம்படுத்துவதன் மூலமாக ரஷ்யாவின் விமானப்படை பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மிக்-31 சாதாரண விமானமல்ல பல்வேறு உலக சாதனைகள் படைத்த பெருமை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. 37 கிலோமீட்டர் உயரம் பறந்தது, 4 நிமிடத்தில் 35 கிலோமீட்டர் உயரம் சென்றது போன்ற சாதனைகளை […]

Read More

ரஷ்ய வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் டெலிவரி !!

December 1, 2021

அன்றைய சோவியத் ஒன்றியம் மற்றும் இன்றைய ரஷ்யாவின் வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கஸான் 885M ரக அணுசக்தியால் இயங்கும் க்ருஸ் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலின் சோதனைகளை நிறைவு செய்தது. இந்த கப்பலால் ரஷ்ய கடற்படை அணிகளை பாதுகாக்கவும் உலகெங்கும் ரஷ்ய நலன்களை பாதுகாக்கவும் அந்நாட்டு கடல்சார் எல்லையை பாதுகாக்கவும் முடியும் என கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கப்பலில் நான்காம் […]

Read More

தைவானுக்கு ஸ்டெல்த் நீர்மூழ்கி கட்ட உதவும் ஏழு நாடுகளில் இந்தியாவும் அடக்கம் !!

December 1, 2021

தைவான் சீனாவுக்கு எதிராக தனது கடற்படையை வலுப்படுத்தும் விதமாக ஸ்டெல்த் நீர்மூழ்கி கப்பல்களை பெற எண்ணுகிறது. இதற்கு சர்வதேச அளவில் தைவான் உதவி திரட்டி வருகிறது அந்த வகையில் ஏழு நாடுகளின் உதவியுடன் இந்த திட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தைவானுக்கு இந்திய பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் இத்திட்டத்தில் உதவ சென்றுள்ளனர்.

Read More