
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அவசரமாக தளவாடங்களை வாங்க உதவும் முப்படைகளின் சிறப்பு அதிகாரத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சிறப்பு அதிகாரங்களை வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும் இது இந்த வருடம் முன்றாவது முறை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் மூப்படைகளின் துணை தளபதிகளும் சுமார் 500 கோடி ரூபாய் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு அரசின் உத்தரவு இல்லாமலேயே அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.